Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
கோபம் என்பது செயல் அல்ல - அது எதிர்செயல். எதிர்செயல் செய்யும் நிலை அடிமைத்தனத்தின் நிலை.
அதிகம் நிலைத்திருக்கக்கூடிய சக்தி என்றால் அது உள்ளே இருக்கும் சக்தியை உணர்வதுதான்.
நீங்கள் சமநிலையாக இருக்கும்போது மட்டும்தான் உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உண்மையாகவே பயனுள்ளதாக இருக்கும்.
யோகா என்றால் ஒன்றியிருப்பது; அதாவது, உங்கள் அனுபவத்தில், நீங்களும் இந்த பிரபஞ்சமும் ஒன்றாக இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் நிகழும் எதுவும் உங்களுக்கு வளம்சேர்க்க முடியும், அதற்கு அதை நீங்கள் ஒருவித விழிப்புணர்வுடன் கையாண்டால் போதும்.
இந்த பூமியில் பெண்தன்மை காணாமல் போய்விட்டால், இங்கு அழகான, மென்மையான, அழகியல் மிகுந்த எதுவும் பிழைத்திருக்காது.
இந்திய பாரம்பரிய இசையும் நடனமும் வெறும் பொழுதுபோக்குக்கானவை அல்ல - அவை உங்கள் விழிப்புணர்வை உயர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஆனந்தத்தின் ஆதாரமாக மாறினால், உங்கள் உறவுகள் அற்புதமாக அமையும்.
ஈஷாவில் மஹாசிவராத்திரி, கடந்த சில ஆண்டுகளில் விழிப்புணர்வின் மாபெரும் விழாவாக உருவெடுத்துள்ளது. உள்முகமாகத் திரும்புவதால் மட்டும்தான் அன்பு, ஞானம் மற்றும் ஆனந்தம் நிறைந்த உலகினை நம்மால் உருவாக்க முடியும். நாம் இதனை நிகழச்செய்வோம்.
நீங்கள் ஏதோவொரு நிலையை அடைவது நீங்கள் அதற்கு ஆசைப்படுவதால் அல்ல, நீங்கள் சரியான விஷயங்களைச் செய்து அதற்கான திறமையை சம்பாதிப்பதால் தான்.