வந்தே மாதரம் என்றால், "தாயே, உன்னை நான் வணங்குகிறேன்" என்று பொருள்.
இந்திய குடியரசு தினத்தன்று பாடப்பட்ட சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் "வந்தே மாதரம்" பாடல் உங்களுக்காக...

நாம் வாழும் தேசத்தை தாயாகப் பார்ப்பது நமது வழக்கம். இது இந்தியர்களுக்கே உரித்தான உன்னத மாண்பு எனலாம்.

"வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

எனப்பாடி தேசியக் கவி பாரதி விடுதலை வேட்கையைத் தூண்டினார். 66வது குடியரசு தினத்தை கொண்டாடியுள்ள இச்சூழலில் 1882 ம் ஆண்டு பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் அவர்கள் இயற்றிய வந்தே மாதரம் பாடல் வரிகளுக்கு, சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழுவினர் இசையமைத்து வழங்கியுள்ள பாடல் உங்களுக்காக...