‘வயது நாற்பதைத் தாண்டுது, இல்லையா? அதனால் பிரஷர் வந்திடுச்சு’ என்று மாத்திரை சாப்பிடும் மனிதர்களை இப்போது நிறைய பார்க்க முடிகிறது. மாறி வரும் வாழ்க்கைமுறைதான் இத்தகைய நோய்களுக்குக் காரணம். இதற்கு தீர்வுதான் என்ன? தொடர்ந்து படியுங்கள்...

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

ரத்தக் கொதிப்பு என்றால் என்ன?

ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம்.

ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்?

ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.

blood pressure, low bp, high bp

2-வது வகையில் உள்ளவர்கள் ரத்தக் கொதிப்பு வராது தடுக்க வேண்டுமானால், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும்.

ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இயற்கையாகவே வயதாக ஆக ரத்த நாளங்கள் அதனுடைய ஜவ்வுத்தன்மையை இழப்பதால், நாளங்களின் அகலம் குறுகி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மரபணுக்களால் மட்டுமின்றி, அதே உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் என்று பெற்றோர் வாழ்ந்த சூழ்நிலையிலேயே வாழும்போது குழந்தைகளுக்கும் அந்த நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிக ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

  • உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது
  • உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல்
  • அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள்
  • மது மற்றும் புகைப் பழக்கம்
  • சரியான உடற்பயிற்சி இன்மை
  • நீரிழிவு நோய்

ரத்தக் கொதிப்பின் வகைகள்:

வகை 1: பெரும்பான்மையோருக்கு வரும் ரத்தக் கொதிப்பு இந்த வகைதான். இதற்கு இன்னமும் காரணம் கண்டறியப்படவில்லை.

வகை 2: இது சீறுநீரகம் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படுகிறது. கர்ப்பக் காலத்தில் வரும் ரத்தக் கொதிப்பும் இந்த வகைதான்.

ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்:
பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும்போது இது கண்டு பிடிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.

சிகிச்சை முறைகள்:

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, பரிசோதித்து, தவறாது மருந்துகள் உட்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தவறாது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக் காலம் முழுவதிற்கும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

'அம்' மந்திர உட்சாடணை தெளிவையும், ஸ்திரத்தன்மையையும் தருவதால், நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா, நீரிழிவு, வாதம், ரத்தக் கொதிப்பு மற்றும் சைனஸ் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

உணவு முறைகள்:

அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும். சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.

உடற்பயிற்சி

ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

யோகப் பயிற்சி

ஆசனங்கள், ‘அம்’ மந்திர உட்சாடணை, மூச்சுப் பயிற்சிகள், கிரியைகள், தியானம் அனைத்துமே ரத்த அழுத்தத்தைச் சீர்செய்ய பெரிதும் உதவுகின்றன. சூன்ய தியானம் மற்றும் ஷக்தி சலனக் கிரியை பயிற்சிகளால் ரத்தக் கொதிப்பு குறைவதாக மருத்துவ ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

யோகா எவ்வாறு உதவுகிறது?

  • தொடர் யோகப் பயிற்சிகளால் குறைந்தபட்சம் 10 முதல் 15 அளவு வரை ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • யோகப் பயிற்சிகளால் உடல் எடை சீராவதால், ரத்த அழுத்தமும் சீராகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • இரவில் அனைவருக்கும் ரத்த அழுத்தம் பொதுவாகக் குறைந்தாலும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இரவிலும்கூட ரத்த அழுத்தம் குறைவதில்லை. யோகா இந்த நிலையை மாற்றுகிறது.
  • தொடர் யோகப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே மன அழுத்தத்தால் ஏற்படும் அதிகப்படியான ரத்த அழுத்தம் நீங்குகிறது.
  • யோகா தளர்வு நிலையை அளிப்பதால் மன அழுத்தம் நீங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • யோகப் பயிற்சிகள் அனைத்துமே தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன்செய்வதால் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.

மனம் எப்படியோ.... உடலும் அப்படியே!

மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் உடலிலும் பிரதிபலிக்கின்றன. அப்பாதிப்பு ஒருவருக்கு நீரிழிவாகவும், இன்னொருவருக்கு வயிற்றில் புண்ணாகவும், இன்னொருவருக்கு ரத்தக் கொதிப்பாகவும் வெளிப்படுகிறது.

நீங்கள் விரும்பியபடி விஷயங்கள் நடக்காதபோது, உங்கள் உடல், மனம் அனைத்துமே போராட்டத்துக்கு உள்ளாகிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் தீவிரமாகி நாட்பட்ட நோய்க்குக் காரணமாகிறது. யோகப் பயிற்சிகள் தொடர்ந்து செய்து வரும்போது, உங்கள் உடல், மனம் அனைத்துமே அமைதியாகவும் விழிப்பாகவும் மாறும். எனவே மன அழுத்தம் உண்டாகும் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

நாட்பட்ட நோய்களான நீரிழிவாகட்டும், ஆஸ்துமாவாகட்டும், அல்லது ரத்தக் கொதிப்பாகட்டும், அனைத்து நோய்களுக்கும் அதே யோகப் பயிற்சிகள்தான் பரிந்துரைக்கப்படுகிறது. சக்தி உடலில் ஏற்படும் பாதிப்பு உடலில் நோயாக வெளிப்படுகிறது. ஆசனப் பயிற்சிகள், சக்தி உடலில் முழு அதிர்வுகளையும் சரியான சமநிலையையும் பெறச் செய்கிறது. எனவே உடலில் நோய் ஏற்பட வாய்ப்பில்லை.

'அம்' மந்திர உட்சாடணை தெளிவையும், ஸ்திரத்தன்மையையும் தருவதால், நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா, நீரிழிவு, வாதம், ரத்தக் கொதிப்பு மற்றும் சைனஸ் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

ஒருவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஒற்றைத் தலைவலி போன்ற நோய்களை எளிதில் சமாளிக்க முடியும். ஈஷாவிற்கு வந்த பிறகு பலர் இந்த நோய்களில் இருந்து விடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எந்த சிகிச்சையும் இங்கு தரப்படவில்லை. அவர்கள் குணமானததற்குக் காரணம், தங்களுக்குள் உயர்ந்த நிலையிலான மகிழ்ச்சியை அனுபவித்ததுதான்!

U.S Pacific Air Forces @ flickr