பரவசமளித்து பாதையை சுருக்கும் பக்தி
பக்தியின் பரவசமிருந்தால், ஆன்மீகப் பாதை சுருங்கிவிடும் என்று இன்றைய தரிசனத்தில் சத்குரு பேசியதிலிருந்து...
பக்தியின் பரவசமிருந்தால், ஆன்மீகப் பாதை சுருங்கிவிடும் என்று இன்றைய தரிசனத்தில் சத்குரு பேசியதிலிருந்து...
எங்கிருந்தாலும் தரிசனம்
6:26
மற்ற நாட்களைவிட பனி சற்று அதிகமாக இருக்க, பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போதிலும், கூடியிருக்கும் அனைவரின் முகங்களும் சத்குருவைக் கண்டவுடன் சூரியனைக் கண்ட முழுநிலவைப் போல பிரகாசித்தன.
Subscribe
6:35
ஒருவர் எப்படிப்பட்ட ஆன்மீக சாதனை செய்தாலும், இது இந்த நான்கு வகைகளுக்குள் ஒன்றாகத்தான் இருக்கமுடியும், புத்தியைப் பயன்படுத்தினால் ஞான யோகா, உணர்வுகளைப் பயன்படுத்தினால் பக்தி யோகா, சக்தியைப் பயன்படுத்தினால் க்ரியா யோகா, செயலை பயன்படுத்தினால் கர்ம யோகா. கர்ம யோகாவிற்கும் க்ரியா யோகாவிற்கும் ஸ்திரமான அடித்தளம் உள்ளன. ஆனால் பக்தியும் ஞானமும் அப்படியல்ல.
6:45
ஞானத்தின் பாதையில் நீங்கள் சென்றால், உங்கள் புத்தி அனைத்தையும் பிரித்துப் பார்த்து உண்மையிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்புகளே அதிகம். பக்தியின் பாதையில் சென்றால், பிறர் உங்களை முட்டாள் என்று சொன்னாலும் உங்களுக்குள் நீங்கள் இனிமையாக உணர்வீர்கள். உங்கள் உடலும் சக்திகளும் நம்பகமானவை. மனதும் உணர்வுகளும் தினமும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. தாவிக்குதிக்கும் வாய்ப்புகள் உடலுக்கும் உள்ளது, மனதிற்கும் உள்ளது. மனதிற்கும் உணர்வுகளுக்கும் தாவிச்செல்வது என்பது சாத்தியமல்ல.
7:05
உணர்வுகளின் இனிமை என்பது, யாரோ ஒரு மனிதர்மீது இருந்தால், அவரைச் சார்ந்ததாக இருக்கும். என்னை நம்புங்கள், பூமியில் ஒரு மனிதர் கூட நீங்கள் முழுவதுமாக நம்பும்படியாக இல்லை. உங்கள் அன்பு தெய்வீகத்தின்மீது அசைவில்லாமல் இருந்தால், அதுவே பக்தி, அப்போது பேரானந்தத்தில் வேடித்துப்போவீர்கள். அது உங்கள் பாதையை சுருக்கிவிடும். பக்தியின் பாதையில் சென்றால், உங்கள் உணர்வுகளின் இனிமையால், உண்மையை அரவணைப்பின் மூலம் உணர்வீர்கள். பக்தியெனும் இந்த இனிமையான சூழ்நிலையை உங்களுக்குள் உருவாக்கிவிட்டால், நீங்கள் செய்யும் ஆசனங்களும் க்ரியாக்களும் வெகு சீக்கிரமே பலன்தரும்.
7:13
அவர்முன் முயற்சியின்றி பெருக்கெடுக்கும் பக்தி அப்படியே நீடித்துவிடாதா என்ற ஏக்கத்துடன் அனைவரும் பார்த்திருக்க, வணங்கி விடைபெற்றுச்சென்றார் சத்குரு.