ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்டவர்கள், யோகப் பயிற்சிகள் செய்வதால் அடையும் பலன்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் தியானம் செய்ய தியானலிங்கம் வந்த இந்த அன்பருக்கோ குழந்தை வரம் கிடைத்ததை நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறார்... தியானலிங்கம் குழந்தைப் பேறும் கொடுக்குமோ?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அபிபு ரஹ்மான், ரிஸ்வானா தம்பதி:

எங்களுக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு சூழலில் இரண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு உந்துதலில் நானும் என் மனைவியும் தியானலிங்கத்திற்கு வந்தோம். தியானலிங்கத்திலிருந்து வெளியே வந்ததும், இருவருக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சி. அதை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு தன்னார்வத் தொண்டர் எங்களிடம் வந்து ஒரு துண்டு நோட்டீஸ் கொடுத்தார். அதில் முதலில் நாங்கள் கண்டு ஆச்சரியப்பட்ட வாக்கியம், ‘திங்கட்கிழமை குழந்தை பேற்றிற்கான அதிர்வை தியானலிங்கம் வெளிப்படுத்தும்‘ என்பதுதான். அடுத்த திங்கட்கிழமை இருவரும் வந்து தீர்த்தகுண்டத்தில் குளித்து நாத ஆராதனையில் கலந்து கொண்டோம்.

ஏன் இவ்வளவும் தெரிவிக்கின்றேன் என்றால் உண்மையிலேயே என் மனைவி விரைவிலேயே கர்ப்பம் தரித்தார். எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. சில நாட்கள் வந்த எங்களுக்கே இவ்வளவு பெரிய பாக்கியம் என்றால் நித்தமும் சத்குருவின் தியானம் பயிலும் அன்பர்கள் எவ்வளவு ஆனந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று புரிகின்றது. உடனே ஈஷா யோகா வகுப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. சத்குரு அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்..!

El Gran Toñeti @ flickr