சென்னையில் புதிய ஈஷா தியான மையங்கள் !
டி.வியின் இரைச்சல்; குழந்தைகளின் சத்தம்; நண்பர்கள்-உறவினர்களின் திடீர் வருகை என பலவித காரணிகளால் வீட்டில் வைத்து யோகப் பயிற்சிகள் செய்வதில் சிரமம் இருக்கலாம். அதனால் பலரும் பயிற்சி செய்வதைக் கூட நிறுத்தி இருக்கலாம். அவர்களெல்லாம் இந்த இடைஞ்சல்கள் ஏதுமில்லாமல் யோகப் பயிற்சிகளைத் தொடர்வதற்கு சென்னையில் திறக்கப்படுகின்ற புதிய தியான மண்டபங்கள் குறித்து இங்கே சில வரிகள்!
டி.வியின் இரைச்சல்; குழந்தைகளின் சத்தம்; நண்பர்கள்-உறவினர்களின் திடீர் வருகை என பலவித காரணிகளால் வீட்டில் வைத்து யோகப் பயிற்சிகள் செய்வதில் சிரமம் இருக்கலாம். அதனால் பலரும் பயிற்சி செய்வதைக் கூட நிறுத்தி இருக்கலாம். அவர்களெல்லாம் இந்த இடைஞ்சல்கள் ஏதுமில்லாமல் யோகப் பயிற்சிகளைத் தொடர்வதற்கு சென்னையில் திறக்கப்படுகின்ற புதிய தியான மண்டபங்கள் குறித்து இங்கே சில வரிகள்!
தமிழ்ப் புத்தாண்டன்று சென்னை பெரம்பூர் மற்றும் கூடுவாஞ்சேரியில் தன்னார்வத் தொண்டர்களின் பெரும் முயற்சியால் புதிய தியான மண்டபங்கள் திறக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் 4000 சதுர அடி கொண்ட இடத்தை சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டர் அர்ப்பணிக்க, மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் முதல் ஈஷாவிற்கே உரிய தனித்துவமான அழகுணர்ச்சி ததும்பும் சின்னச் சின்ன நிறைவுப் பணிகள் வரை அனைத்தையும் செய்தது ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்களே!
Subscribe
திரு.ராஜாராமன் ஐ.ஏ.எஸ் அவர்களால் சித்திரை திருநாளன்று திறந்து வைக்கப்பட்ட இந்த மண்டபம் பெரவள்ளூர் ESI மருத்துவமனை தெருவில் அமைந்துள்ளது (தொடர்பு எண்: 8300036000). இதேபோன்று கூடுவாஞ்சேரியிலும் (செல்: 8939157399/9443958371) சித்திரைத் திருநாளன்று திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை ஆழ்வார்திருநகர் மற்றும் பாண்டிச்சேரியிலும் புதிய தியான மண்டபங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதோடு, விரைவிலேயே திறக்கப்படவும் உள்ளன.
இந்த தியான மண்டபங்கள் ஈஷா தியான அன்பர்கள் அன்றாட யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், ஷாம்பவி மற்றும் பிற ஈஷா வகுப்புகள் நிகழ்வதற்கும் ஒரு வாய்ப்பாய் அமைகிறது. இங்கு நடைபெறும் மாதாந்திர சத்சங்கங்களில் கலந்துகொள்வதன் மூலம், யோகப் பயிற்சிகளில் தங்களுக்குள்ள சந்தேகங்களை தியான அன்பர்கள் தீர்த்துக்கொள்ள முடியும். வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை தியான மண்டபங்கள் திறந்திருக்கும்.
மேலும், இந்த தியான மண்டபங்களின் சத்குரு சந்நிதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சக்திவாய்ந்த இந்த இடத்தில் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடலளவிலும் மனதளவிலும் சிறப்பான பலன்களைப் பெற முடியும். மேலும், தங்கள் வீடுகளில் பயிற்சி செய்வதற்கான சரியான சூழல் இல்லாதவர்கள் இந்த மண்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சென்னையில் கீழ்கண்ட இடங்களில் ஏற்கனவே தியான மண்டபங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தி நகர் - 83000 11000
ஆவடி - 94450 35011
அண்ணா நகர் - 83000 35000
அடையாறு - 83000 32000
மேடவாக்கம் - 98404 72013
நங்கநல்லூர் - 94449 11747
திருவொற்றியூர் - 98400 42515
சென்னையின் தியான மண்டபங்கள் மற்றும் பிற விபரங்களைத் தெரிந்துகொள்ள 8300011000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.