Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உங்கள் குழந்தை முழுமையாக மலரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அன்பான, ஆனந்தமான, அமைதியான மனிதராக மாறுங்கள்.
நீங்கள் யார், என்னவாக இருக்கிறீர்கள் என்பது தெய்வீகத்தின் ஒரு வெளிப்பாடுதான்.
நீங்கள் உண்மை உணரும் தேடலில் உறுதியாக இருந்தால், எதைப்பற்றியும் யூகங்கள் வேண்டாம் - தேடலில் இருங்கள், போதும்.
உங்கள் அன்பு செலுத்தும் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. நீங்களே அன்பாக மாறிவிடும்போது, பிரபஞ்சத்தையே உங்கள் அன்பில் கொள்ள முடியும்.
பாதுகாப்புகளை விட்டுவிட்டு இருக்க தயாராக இல்லை என்றால், நீங்கள் மாற்றத்தை அனுமதிக்கவில்லை. மாறாமலே இருக்கும் எதுவும் இறந்துபோனது போலதான்.
மற்றவர்களின் கர்மாவை பற்றி ஒருபோதும் பேச வேண்டாம் - உங்கள் கர்மாவிற்கு நீங்கள் பொறுப்பு எடுங்கள்.
அன்பின் அரவணைப்பில், மகிழ்ச்சியின் மடியில், ஊக்கம் அளிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிட்டால், நாம் குழந்தைகளுக்கு பெரிதாக எதுவும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. இயல்பாகவே அவர்களின் முழுமையான திறனுக்கு மலர்ந்து விடுவார்கள்.
ஒருவர் அறிவுரை கொடுக்கும்போது, அந்த அறிவுரை முதலில் அவருக்கு வேலை செய்திருக்கிறதா என்று எப்போதும் பாருங்கள்.
யோகா, கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் மனத்தையும் பித்தான நெஞ்சத்தையும் சமநிலைப்படுத்துவது எப்படி என்பதையே எப்போதும் பார்க்கிறது.
நம் அனைவருக்கும் காலம் ஒரே வேகத்தில்தான் முடிந்துகொண்டு வருகிறது. நேரத்தை ஆள முடியாது, ஆனால் நம் சக்தியை நாம் முறைப்படுத்த முடியும்.
ஒவ்வொரு மனிதரும் வேண்டுவது கருணையையோ, தன்னை சகித்துக்கொள்வதையோ அல்ல. மதிப்பையும், தன்னை ஏற்றுக்கொள்வதையும் தான்.