FILTERS:
SORT BY:
நினைப்பிலும், உணர்வுகளிலும் உங்களை எந்தளவுக்கு எல்லை போட்டு பிரித்துக் கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போவீர்கள்.
நேற்று நீங்கள் செய்தது எதுவாக இருந்தாலும், நீங்கள் விரும்பினால், இந்த க்ஷணத்தில் ஒரு அற்புதமான மனிதராக இருக்க முடியும். பிரபஞ்சம் உங்களுக்கு இந்த சுதந்திரத்தை தந்திருக்கிறது.
பெண்களை மதிக்காத, ஆதரிக்காத ஒரு சமுகம் முன்னேறவோ, வளம்பெறவோ முடியாது. உலகம் எங்கும் பெண்மை மலரட்டும்.
'நம்பிக்கைகள்' என்றால், உங்களுக்குத் துளியும் தெரியாத விஷயங்களைப் பற்றி நீங்களாக முடிவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
நண்பர் என்றால் என்ன? நண்பரும் உங்களைப் போலவே குழப்பத்தில் இருக்கும் இன்னொரு ஆள்தான். நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க முடிந்தால், அப்போதுதான் நிஜமான நட்பு உருவாகிறது.
சுற்றியுள்ள சூழலை இனிமையாக மாற்ற, உங்களுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவை. உங்கள் உடலையும், மனத்தையும், சக்திநிலையையும் இனிமையாக வைத்துக்கொள்வது நூறு சதவிகிதம் உங்கள் பொறுப்புதான்.
பக்தி என்றால் வாழ்க்கையுடன் உங்கள் ஈடுபாடு பரிபூரணமாக இருக்கிறது, எந்தளவுக்கு என்றால், இனி நீங்களே உங்களுக்கு முக்கியமில்லை என்று ஆகிவிடுகிறது.
மனத்தின் இயல்பு இதுதான்: நீங்கள் குறிப்பிட்ட எண்ணங்களை தவிர்க்கப் பார்த்தால், அது மட்டும்தான் மனத்தில் தோன்றும்.
உடல், புத்தி - இதன்படி மட்டுமே நீங்கள் போனால், வாழ்க்கை ஒரு சர்க்கஸ் போலதான் இருக்கும். தெய்வீகத்தின் புத்திசாலித்தனம் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் போது, வாழ்க்கை ஒரு நடனமாக ஆகிவிடும்.