Wisdom
FILTERS:
SORT BY:
திறமையும், ஒருமுகமான கவனமும் கொண்ட, ஊக்கம் மிக்க இளைஞர்களை உருவாக்குவதன் மூலம், இதுவரை உலகம் பார்த்திருக்காத மாபெரும் அதிசயமாக பாரதம் மாறிடும்.
படைப்பின் ஒவ்வொரு அம்சமும் - மண்துகள் முதல் மலை வரை, நீர்த்துளி முதல் சமுத்திரம் வரை, ஒவ்வொன்றுமே - மனித புத்திக்கு மிகவும் அப்பாற்பட்ட ஒரு புத்திசாலிதனத்தின் வெளிப்பாடுதான்.
கர்மா என்பது நல்லது-கெட்டது பற்றியதே அல்ல, காரணம்-விளைவு பற்றியதே.
நம்பிக்கை என்றால் உண்மையில் உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நீங்களாக யூகித்து கொள்வது. தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியவில்லை என்பதை உணர்ந்து கொள்வது.
நீங்கள்' எனப்படும் உயிருக்கு கவனம் செலுத்தினீர்கள் என்றால், அது உங்களுக்குள் மலர்ச்சி அடையும்.
கடந்து போன வருடத்தின் பாரங்களை உதிர்த்துவிட்டு புதியதாக, உயிரோட்டத்துடன் வெளிவரும் நேரம் இது.
வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு அதிக வலிமையுடன் நீங்கள் வெளிவர முடியும், அல்லது அதனால் உடைந்து போய்விட முடியும் - இந்த ஒரு சாய்ஸ் உங்களிடம் இருக்கிறது.
வாழ்வின் ரகசியம் இதுதான் - எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸான கண்ணோட்டம் இல்லாமல் பார்ப்பது, அதே சமயம் அதில் முழுமையாக ஈடுபடுவது. ஒரு விளையாட்டு போல. முழு ஈடுபாடு உண்டு, ஆனால் அதில் சிக்கிப்போவது இல்லை.
உங்களிடம் இருப்பதை - அன்பு, ஆனந்தம், திறமை - எதுவாக இருந்தாலும் அதை இப்போதே வெளிப்படுத்துங்கள். இன்னொரு பிறவிக்காக அதை சேர்த்துவைக்க பார்க்காதீர்கள்.