Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
கற்றுக்கொள்வது என்றால் அறிவை சேகரித்துக்கொள்வது அல்ல. கற்பது என்றால் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை.
நீங்கள் இறக்கக்கூடியவர் என்பதை உணர்ந்துகொள்ளும் போதுதான், விழிப்புணர்வு கொண்டவராக மாறுவீர்கள். இல்லாவிட்டால், துளியும் விழிப்புணர்வு இல்லாத வாழ்க்கையைதான் வாழ்வீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் ஒரு இனிமையான உணர்வுதான் நேசம். அந்த மற்றொருவர் விலகி போனாலும், அப்போதும் உங்கள் அனுபவத்தில் அன்பை உணர முடியும்.
நேற்று நடந்த விஷயத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பாதிப்பாக உணர்வது உங்கள் ஞாபகங்களைத்தான், உங்கள் வாழ்க்கையை அல்ல.
யோகாவை ஒரு சிகிச்சை முறை போல பயன்படுத்துவது, ஆகாய விமானத்தை வெறும் பேருந்து போல பயன்படுத்துவதற்கு சமம்.
சந்தோஷம் என்பது நீங்கள் அடையும் ஒரு விஷயம் அல்ல. அது நீங்கள் உங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது.
நம் மனத்தில் ஏதோ ஒரு கசப்புணர்வு இருக்கிறது என்றால், நம் புத்திசாலித்தனம் நமக்கு எதிராக வேலை செய்கிறது என்று அர்த்தம்.
எந்தளவுக்கு அதிகமாக முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு உயிரோட்டம் குறைந்தவராக மாறுவீர்கள்.
அசைவற்ற நிலை, பூரிப்பு, உன்மத்தமான போதை, எல்லாம் ஒன்றாக நிகழ்வது - இது உயிர் தன் உச்சபட்ச சாத்தியத்தில் இருப்பது.
மதங்களுக்கு எல்லாம் முற்பட்டது பாரதத்தின் தேசியம். அப்போதும் நாம் ஒரே தேசமாகத்தான் இருந்தோம், இப்போதும் ஒரே தேசமாகத்தான் இருக்கிறோம். முக்திக்கான, விடுதலைக்கான நம்முடைய தேடலே எப்போதும் நம்மை ஒன்றாக வைத்திருக்கிறது