தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவும், தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தின் ஆதாரமுமான தமிழக கோவில்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனி, கோவில் நிலங்களையும் வருவாயையும் கையகப்படுத்த 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடூரமான கொள்கையை அமல்படுத்தியது.
சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆன பிறகும், கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே கொள்கை, இன்றும் வழக்கில் உள்ளது.
சக்திவாய்ந்த விதத்தில் சக்தியூட்டப்பட்ட கோவில்கள், தன் உயிரோட்டத்தை இழந்து சிதைந்துவருவது, கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் சமூகங்களுக்கும் சொல்லமுடியாத வலியையும் வேதனையையும் தருகிறது.
#கோவில்அடிமைநிறுத்து
ஆதரவு வழங்க கிளிக் செய்கOR
மிஸ்டுகால் கொடுத்து ஆதரியுங்கள்
83000 83000
உங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் மிஸ்டுகால் கொடுத்து ஆதரவு வழங்கச் சொல்லுங்கள்
முகவரி தெரியாத சிறு கோவில்கள் மட்டும் சிதையவில்லை என்பதே நம்பமுடியாத உண்மை. மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துபோகும் பிரபலமான பெரிய கோவில்களும்கூட கொள்ளை அடிக்கப்பட்டு கவனிப்பாறற்று அழிந்து கொண்டிருக்கிறது.
கபாலீசுவரர் கோவில்:
பார்வதி தேவியின் புனிதமான தெய்வச்சிலை ஒன்று திருடப்பட்டு போலிச் சிலை வைக்கப்பட்டது. அறநிலையத்துறை நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில், தெய்வச்சிலையை அடையாளம் காணும் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. களவுபோயி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மூத்த அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
மேலும் வாசிக்க>
காஞ்சி ஏகாம்பரேசுவரர்:
சோமஸ்கந்தரின் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வச்சிலையில், மேலிருந்து 8.7 கிலோ தங்கம் திருடப்பட்டது. அதற்காக மூத்த அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் வாசிக்க>
மதுரை மீனாட்சி:
400 ஆண்டுகள் பழமையான மண்டபம் ஒன்று, கவனிப்பின்மையால் ஏற்பட்ட தீவிபத்திற்கு இரையானது. தீவிபத்திற்கு முன்பே அம்மண்டபம் மிக மோசமான நிலையில் இருந்தது. 46 தூண்களில், 15 தூண்கள் விரிசல் அடைந்திருந்தது, சில இடங்களில் கற்கூரை இடிந்திருந்தது.
இக்கோவிலில் சேதமடைந்துள்ளது இந்த ஒரு மண்டபம் மட்டுமல்ல. தெற்கிலும் கிழக்கிலும் மண்டபங்கள் இடித்து மீண்டும் கட்டப்பட்டுள்ளன என்று யுனெஸ்கோ குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, "பழைய கற்கள் அதன் வாழ்நாள் முடியும்வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆகம சாஸ்திர விதிகளுக்கு எதிரானது."
மேலும் வாசிக்க>
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்:
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நகைகள் கணக்கிடப்பட்டு சரிபார்க்கப்படவில்லை. பெரிய கோவில்களின் நகைகளை ஆண்டுதோறும் சரிபார்த்து நகைகள் பற்றிய விபரங்களின் பதிவேடுகளை பராமரிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகுதான், கோவில் நகைகள் கணக்கிடப்பட்டன.
கோவிலில், 1.4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் எடை குறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டது. கோவில் தலைமை நிர்வாகி, இந்த எடைகுறைவு சாதாரண "தேய்மானத்தால்" என்று கூறினார். நாற்பதாண்டுகளாக கோவில் நகைகள் சரிபார்க்கப்படாமல் இருப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியை வெளிப்படுத்திய போதுதான், கணக்காய்வு செய்பவரின் பதவி அவ்வளவு ஆண்டுகளாக காலியாக இருந்துள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க>
ஆதிகேசவ பெருமாள் கோவில்:
ஆழ்வார்களின் இலக்கியத்தில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும் இக்கோவில், அதன் சிற்ப வேலைப்பாட்டிற்கும், ஒரே கல்லைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கும் பெயர் பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் இருந்து ஒரு வைர கிரீடமும் தங்க நகைகளும் பிற நகைகளும் களவாடப்பட்டன. மேலும் 1990களில், இரண்டு கற்தூண்கள் திருடப்பட்டு சென்னை வரை கொண்டு செல்லப்பட்டன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல்தான் அந்த திருட்டுக்கு வழக்கு பதியப்பட்டது.
மேலும் வாசிக்க>
தோளூர் சிவன் கோவில்:
800 ஆண்டு பழமையான இந்த கோவில், கொங்கு சோழர்களால் கட்டப்பட்டது. கிராம மக்கள் வழிபாடும் சடங்குகளும் செய்துகொண்டு இருந்த காலத்திலே அது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கோவில் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தது, அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்லிற்கு இணங்கி, அதைப் படிப்படியாக இடித்து புணரமைப்பது சிறந்தது என்று பரிந்துரைக்கப்பட்டது. எனினும் சில நாட்களுக்குப் பிறகு கோவில் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது கண்டறியப்பட்டது!
மேலும் வாசிக்க>
ஸ்ரீபுரந்தான் பிரஹதீஸ்வர கோயில்:
1000 ஆண்டுகள் பழமையான நடராஜர் கோவில் ஒன்று 1982ல் திருடப்பட்டு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைக்கு ஆஸ்திரேலிய தேசிய கலை காட்சிக்கூடத்திற்கு விற்கப்பட்டது. 2014ல், ஆஸ்திரேலிய அரசு இச்சிலையை இந்தியாவிற்கு திருப்பித் தந்தது. எனினும் களவாடப்பட்டு விற்கப்பட்ட தேவி, கணேசர் மற்றும் உமா பரமேஷ்வரி சிலைகள் இன்னும் திரும்பக் கிடைக்கவில்லை.
மேலும் வாசிக்க>
பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்:
1300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பழம்பெரும் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டது. இக்கோவில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இருக்கிறது. தமிழ் வரலாற்றின் தனிச்சிறப்புமிக்க இக்கோவிலை புணரமைத்திட அறநிலையத்துறை முடிவுசெய்தது.
துரதிர்ஷ்டவசமாக, முறையில்லாத புணரமைக்கும் முறைகள், ஒரு பழம்பெரும் செங்கல் சுவர் இடிந்துபோக காரணமானது, அதனால் செங்கல் விமானங்கள் (கோவில் கோபுரங்கள்) சிமெண்ட் கொண்டு பூசப்பட்டன.
சாண்ட்பிளாஸ்டிங் (Sandblasting) முறை மூலமாக சுத்தப்படுத்தப்பட்டதால், வரலாற்றுப் பழமைவாய்ந்த கல்வெட்டுகள் அழிக்கப்பட்டன. சாண்ட்பிளாஸ்டிங் என்பது, அதிக வேகத்தில் மணல்துகள்களை செலுத்துவதன் மூலம் சுத்தம்செய்யும் முறையாகும். பாதுகாப்பு நிபுணர்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி கூறுகையில், மணல் பழமையான கற்களை அரித்துவிடும் என்பதால் தொன்மையான கட்டிடங்கள் மேல் இதை பயன்படுத்தவே கூடாது என்கின்றனர்.
அறநிலையத்துறையின் புணரமைக்கும் பணிகளில் இந்த சாண்ட்பிளாஸ்டிங் முறைக்கு, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இன்னும் பல சோழர் கோவில்களும் பலியாகியுள்ளன.
மேலும் வாசிக்க>
ஆபத்சஹாயேஷ்வரர் கோவில்:
தோராயமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழரால் கட்டப்பட்ட இக்கோவில் இன்று மிக மோசமாக சிதிலமடைந்துள்ளது. இக்கோவில் தனித்துவமான செங்கல்-கல் கட்டமைப்பு முறையில் கட்டப்பட்டது, இதில் செங்கல் அமைப்புகளும் கற்தூண்களும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக பக்தர்களும் கலைப்பிரியர்களும் இக்கோவிலைக் காணக்கூட முடியாத நிலை நிலவுகிறது. கோவிலும் கோபுரமும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. கோவிலுக்குள் உள்ள பழமையான சுவர் சித்திரங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துவிட்டன. பல கோவில்களில், சன்னதிகள் இடிந்து கூரைகள் இடிந்து காணப்படுகின்றன.
மேலும் வாசிக்க>
திருப்போரூர் கந்தசுவாமி & ஆளவந்தான் கோவில்கள்:
ஒரு பொதுநல வழக்கின்படி, சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டிய இக்கோவிலின் 2000 ஏக்கர் நிலம் கிட்டத்தட்ட 6000 கோடி மதிப்புடையது. இந்நிலத்தை ரியல் எஸ்டேட் சுராக்கள் அபகரிக்கப் பார்த்தனர். சட்டத்திற்குப் புறம்பாக கோயில் நிலத்தை கைமாற்றும் முயற்சியை எதிர்த்து பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் நிலத்தை கைமாற்றுவதற்கு தடை விதித்தது.
Really disturbing to see the condition of our temples. How can we do this to temples consecrated by great yogis like Agastya Muni & Patanjali? Everyone please support @SadhguruJV in #freeTNTemple. Give a missed call NOW, if you care about our temples. https://t.co/DJyroNGdO8
Completely agree with @sadhguruJV. Leave it for devotees. Sad to see so many places of worship without a single pooja taking place. Very little done for maintenance,security etc. #FreeTNTemples
So painful to see temples which held such great significance and 1000’s of years of history being reduced to this.
It’s high time this is corrected and through a proper process,management of temples everywhere be handed over to devotees. With Sadhguru in this much needed cause. https://t.co/DrxdL3mBZK
People should demand funds to resurrect temples - unfortunately we don’t respect our heritage in our country be it temples or museums. Govt must allocate funds to prevent such neglect https://t.co/i3nrOkQHdN
I've been on a pilgrimage, My heart bleeds for the heartless exploitation of our sacred spaces.Temples need to be free, just as other places of worship are.@SadhguruJV has given his voice.We all need to unite in one voice to rescue our faith. #FreeTNTemples#FreeTemplesFromGovthttps://t.co/vIxTd156SJ
Really disturbing to see the condition of our temples. How can we do this to temples consecrated by great yogis like Agastya Muni & Patanjali? Everyone please support @SadhguruJV in #freeTNTemple. Give a missed call NOW, if you care about our temples. https://t.co/DJyroNGdO8
Completely agree with @sadhguruJV. Leave it for devotees. Sad to see so many places of worship without a single pooja taking place. Very little done for maintenance,security etc. #FreeTNTemples
திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு கோரிக்கை
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை
Tell your family & friends to show their support with a missed call
இந்து சமயம் & அறநிலையத்துறை சட்டம்: ஆங்கிலேய ஆட்சியின்போது தோன்றிய சரித்திரம்
கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் ரெகுலேஷன் 7 சட்டத்தை அறிமுகப்படுத்தி கோவில்களின் நிலத்தையும் பக்தர்கள் வழங்கிய செல்வத்தையும் கைப்பற்ற, அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
அனைத்து மதங்களைச் சேர்ந்த அமைப்புகளையும் ஆங்கிலேய அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, மெட்ராஸ் சமய மற்றும் அறநிலையங்கள் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இச்சட்டம் இந்து சமய & அறநிலையத்துறை சட்டமாக திருத்தப்பட்டு, இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் பொருத்தமானது என்று மாற்றியமைக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவிலும் அரசு கட்டுப்பாட்டில் தொடர்ந்தது
இந்து சமய & அறநிலையங்கள் சட்டத்தின்படி, கோவில்களையும் அதன் நிதியையும் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்களை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஏற்க மறுத்தது.
நீதிமன்றங்களின் எதிர்ப்புகளையும் மீறி, தமிழ்நாடு இந்து சமய & அறநிலையங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இன்று 38,000 திற்கும் மேலான கோவில்கள், மடங்கள் மற்றும் இதர அமைப்புகள், தமிழ்நாடு சமய & அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
பிரம்மாண்டமான நமது தமிழ் கோவில்களும் கலாச்சாரமும்
கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல. அவை, ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்திற்கும் நமக்குமான தொடர்பு.
தொடர்பில் இருங்கள்
இந்த இயக்கத்தோடு தொடர்பில் இருக்க விரும்புகிறீர்களா?
பக்தர்கள் என்ன சொல்கிறார்கள்
பல வருடங்களாக ஆட்சி புரிந்த அரசர்களும்.. அரச பிரதிநிதிகளும் நமக்காக விட்டு சென்றது அரண்மனைகளோ, மாட மாளிகைகளோ, அரசவைகளோ அல்ல... அவர்கள் வி்ட்டு சென்றது கோவில்கள் மட்டுமே .. வாழ்வு செழிக்க.. வாழ்வியலை கற்க.. கோவில்கள் தேவை என்பதற்காக..#கோவில்அடிமைநிறுத்து 🙏 pic.twitter.com/5Z73BmEdlV
— Manivannan Rajamanickam (@manirsindia77) March 15, 2021
கோவில்கள் பக்தர்களின் பராமரிப்பின் கீழ் இருந்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், அவற்றை உயிரோட்டமாய், அதிர்வலையோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுயசார்புடையதாகவும் அவர்கள் ஆக்கியிருப்பார்கள்.
கோவில்கள் பக்தர்களின் பராமரிப்பின் கீழ் இருந்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், அவற்றை உயிரோட்டமாய், அதிர்வலையோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுயசார்புடையதாகவும் அவர்கள் ஆக்கியிருப்பார்கள்.