உயிர் என்பது ஆன்மீகக் குமிழி
அதை உங்களால் அகப்படுத்த முடியாது
ஒருபோதும் சொந்தமாக்கிட முடியாது
ரசிக்க முடியாது
நீங்கள் அதுவாகவே இருக்க மட்டும்தான் முடியும்.
வாழ்க்கைக்கு அர்த்தமில்லை.
நீ நான் என்ற பொய்,
நல்லது தீயது என்ற ஏமாற்றம்,
உயர்வு தாழ்வு என்ற முன்முடிவு,
உயிரில் உள்ளபடியே உள்ள சாரத்தை
உங்களுக்கு மறுத்துவிடும்.
வெறுமனே இருங்கள், சுவாசியுங்கள், மலருங்கள்.