என் மனதின் இனிய ஓரங்களில்
பரந்த சமுத்திரங்களில் உக்கிரமான
எரிமலைகள் வெடிக்கின்றன. கொந்தளிக்கும்
நதிகள் அழகிய மாதின் பனிதோய்ந்த
இதழ்களிலிருந்து ஓடுகின்றன. நஞ்சுடைய சர்ப்பங்கள்
அன்பான அரவணைப்பில் கட்டியணைக்கின்றன.
எல்லா வண்ணங்களிலும் பூக்கள் கடும்
பாலைவனத்தில் பூக்கின்றன. கருப்பு விதவை சிலந்தி
தேன் சிந்துகிறது. பெரியவர்கள் சிரித்து
குழந்தைகளைப் போல விளையாடுகின்றனர்.
வாழ்வின் போக்கைச் சந்தைகளன்றி மனிதரே நிர்ணயிக்கின்றனர்.
நம் நாகரிகத்தைப் பெண்தன்மை படைக்கிறதேயன்றி போர்களில்லை.
மக்கள் கதகதப்பாக இருக்கின்றனர், காலநிலையல்ல
இட்லிகள் மென்மையாக காபி ஸ்ட்ராங்காக
என் மனதின் இனிய ஓரங்களில்…