ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கு 25% சலுகை கிடைக்கும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கு 25% சலுகை கிடைக்கும்.
ஈஷா யோகா ரிட்ரீட் வகுப்பு, உங்கள் வாழ்வை உங்களுக்கு வேண்டியவாறு நீங்களே உருவாக்கிக் கொள்ளத் தேவையான கருவிகளையும், தீர்வுகளையும் வழங்கும்.
இந்நிகழ்ச்சியின் அம்சங்கள்:
ஷாம்பவி மஹாமுத்ரா எனும் சக்திவாய்ந்த யோகப்பயிற்சி
ரம்மியமான ஈஷா யோக மையத்தில் 4-நாள் தங்கும் வசதி
சத்தான, முழுமையான சைவ உணவு
தியானலிங்கம் மற்றும் பிற பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களுக்கு சென்றுவருவது
ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி (தொடர்ந்து செய்யும்போது கிடைக்கும்) பலன்கள்:
மன-சோர்வு மற்றும் கவலை குறைவு
முதுகுவலி, கழுத்துவலி, தலைவலி, செரிமானப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம்
தூக்கத்தின் தரம் மேம்படுவது
சிந்தனையில் தெளிவும் உணர்ச்சியில் சமநிலையும் அதிகரிக்கும்
அடுத்தவரோடு பழகுவது எளிதாகும், உறவுகளில் நல்லிணக்கம் மேம்படும்
இது கோவை ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து பங்கெடுக்கும் 3.5 நாள் நிகழ்ச்சி. இந்த ஆரம்பநிலை வகுப்பில் கற்றுத்தரப்படும் விஞ்ஞான அடிப்படையோடு உருவாக்கப்பட்ட பயிற்சிகள், ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வழங்கும். இதில் மிகப் பழமையான சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீக்ஷை வழங்கப்படும். உணவும் தங்கும் வசதிகளும் இதில் உள்ளடக்கம். இங்கு சாத்வீக சைவ உணவு வழங்கப்படும். சக்கரை நோய் இருப்பவர்களுக்கு பத்திய உணவும் கிடைக்கும்.
ஈஷா யோகா வகுப்பு: 7-நாள் வகுப்பு. தினமும் 2.5 மணி நேரம் வரவேண்டும். ஞாயிறன்று மட்டும் 8-மணி நேரம் வகுப்பு நடைபெறும்.
ஈஷா யோகா ரிட்ரீட்: 3.5-நாள் வகுப்பு. சாதாரணமாக வியாழன் மதியம் துவங்கி, ஞாயிறன்று இரவு முடிவுபெறும்
ஈஷா யோகா வகுப்பு: இந்தியாவில் பல நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் நடைபெறும்
ஈஷா யோகா ரிட்ரீட்: கோவை ஈஷா யோக மையம், புதுடில்லி ஈஷா யோகா மையம் மற்றும் சென்னையில் நடைபெறுகிறது..
ஈஷா யோகா வகுப்பு: இது வீட்டில் இருந்து வந்துபோகும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா ரிட்ரீட்: நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே தங்கி பங்கெடுக்கும் விதமாக உள்ளது. (சென்னையில் மட்டும் வீட்டில் இருந்து வந்துபோகலாம்)
ஈஷா யோகா வகுப்பு: இந்நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி இருக்காது
ஈஷா யோகா ரிட்ரீட்: இந்நிகழ்ச்சி ஏ.சி அமைக்கப்பட்ட நூதன அறையில் நடைபெறும்.
ஈஷா யோகா வகுப்பு: நிகழ்ச்சிக்கான கட்டணம், ஊரைப் பொருத்து ₹ 600 - ₹ 2,000 வரை இருக்கும்
ஈஷா யோகா ரிட்ரீட்: நிகழ்ச்சிக்கான கட்டணம், ஊரைப் பொருத்து ₹ 600 - ₹ 2,000 வரை இருக்கும். இதில் தங்கும்வசதி, உணவு, நிகழ்ச்சிக்கான கட்டணம் அனைத்தும் உள்ளடங்கும்
ஈஷா யோகா வகுப்பு: எளிமையான ஆரம்பநிலை ஆசனங்களும், சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவும் கற்றுத்தரப்படும்.
ஈஷா யோகா ரிட்ரீட்: உபயோகா, யோக நமஸ்கார், சில ஆரம்பநிலை ஆசனங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா கற்றுத்தரப்படும்.
ஈஷா யோகா வகுப்பு: உள்நிலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட அம்சங்களும் பயிற்சிகளும் கற்றுத்தரப்படும்.
ஈஷா யோகா ரிட்ரீட்: உள்நிலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட அம்சங்கள், பயிற்சிகள், மிதமான மலையேற்றம், ஆதியோகி தியானலிங்கம் லிங்கபைரவி தரிசனம் மற்றும் தீர்த்தகுண்டம் குளியல் அனைத்தும் இதில் உள்ளடங்கும்.
ஈஷா யோகா வகுப்பு: ஞாயிறன்று மதியம் மட்டும் ஒரு முழுமையான சாத்வீக சைவ உணவு வழங்கப்படும்.
ஈஷா யோகா ரிட்ரீட்: நிகழ்ச்சியில் தினமும் சுவையான சைவ உணவு வழங்கப்படும். யோகக் கூற்றுப்படி தயார் செய்யப்பட்ட சாத்வீக உணவு, இப்பயிற்சிகளை நீங்கள் கற்க ஒரு ஏதுவான சூழலை உருவாக்கும். சக்கரைநோய் இருப்பவர்களுக்கு பத்திய உணவும் வழங்கப்படும்.
அடிப்படையில் இரு நிகழ்ச்சிகளும் ஒன்றேதான். ஈஷா யோகா ரிட்ரீட் என்பது தமிழில் நடைபெறும். இன்னர் இஞ்சினியரிங் ரிட்ரீட் என்பது ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் நடைபெறும்.
7-நாள் ஈஷா யோகா நிகழ்ச்சியில் உங்களுக்கு தங்கும் வசதிகளோ, உணவோ வழங்கப்படுவதில்லை. அதோடு அது தினமும் 2.5 மணி நேரம் மட்டுமே நிகழ்கிறது. ஆனால் ரிட்ரீட் நிகழ்ச்சியில் 4 நாட்கள் மிக சௌகரியமான குளிரூட்டப்பட்ட அறையில் தங்கும் வசதியுடன், இவ்வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு பிரத்யேகமாக சமைக்கப்படும் முழுமையான சாத்வீக உணவும் வழங்கப்படுகிறது. இது தவிர பல கூட்டு தியானங்கள், மிதமான மலையேற்றம் போன்ற நிகழ்வுகளும் இதில் ஏற்பாடு செய்யப்படும். ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியுடன் சேர்த்து ரிட்ரீட் பங்கேற்பாளர்களுக்கு உபயோகா பயிற்சிகளும் கற்றுத்தரப்படும்.
இது ஆரம்பநிலை நிகழ்ச்சி. யோகா பற்றி அறியாதவரும் கலந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் நீங்கள் கற்கப்போகும் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா, உங்கள் உடலமைப்பை பெருமளவில் சுத்திகரித்து, புத்துணர்வூட்டி, ஸ்திரமாக்குகிறது. உங்கள் உடலில் நேர்மறை சக்தியையும் செயல்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மனதளவில் தெளிவும், உணர்வளவில் சமநிலையும் ஏற்பட வழிசெய்கிறது. இப்பயிற்சியை தொடர்ந்து செய்தால் கவலை, மன அழுத்தம் போன்றவை இருந்ததற்கு அறிகுறியே இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சத்தையும் சத்குரு அவர்களே மிகக் கவனமாக வடிவமைத்திருக்கிறார்கள். பல ஆண்டுகள் கடுமையான பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியை எடுப்பார்கள்.
சத்குருவின் செயல்கள் இவ்வுலகம் முழுவதிலும் விரிந்திருக்கிறது. அவர் ஆசிரமத்தில் இருப்பதே அரிது என்பதுபோல்தான் இன்றைய சூழ்நிலை இருக்கிறது. அவர் ஆசிரமத்தில் இருக்கும் சமயங்களில் சத்சங்கம் போல் நடக்கும். அதில் அவர் முன்னிலையில் அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கும். அந்தநேரத்தில் சிலசமயம் அவருடன் கேள்வி-பதில் நேரம் போன்றும் நிகழும். சத்குருவின் பயண அட்டவணை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு தங்குவது பெண்களுக்கு நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். நூற்றுக்கணக்கான பெண்கள் முழு-நேர தன்னார்வத் தொண்டர்களாக இங்கேயே தங்கியுள்ளனர். இது தவிர்த்து 24 மணி-நேரமும் காவலுக்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் அதை வழங்க பெண் தன்னார்வத் தொண்டர்கள் தயாராக இருப்பார்கள்.
நிச்சயமாக. அந்நேரத்தில் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகள் மற்றும்பிற பொருட்களை உடன் வைத்திருங்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற உங்கள் புகைப்படம் இருக்கும் ஒரு அடையாள அட்டை (PAN கார்டு, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்றவை). இது கட்டாயமாக தேவைப்படும்.
லூசான உடைகள் 4-5 நாட்களுக்குத் தேவையானது (ஆண்களுக்கு டி-ஷர்ட் / டிராக்ஸ் பெண்களுக்கு சல்வார் கமீஸ்)
குளிர்தாங்கும் போர்வை (இங்கு இரவு நேரங்கள் மிகக் குளிராக இருக்கும்)
ஸ்போர்ட்ஸ் ஷூஸ் (இது கட்டாயமல்ல. நீங்கள் நடப்பதற்கு ஷூஸ் தேவை என்றால் எடுத்துவரலாம்)
தினசரித் தேவைகளான - டூத் பிரஷ், சோப், துண்டு மற்றும்பிற தேவையான பொருட்கள்.
நீங்கள் தினமும் பயன்படுத்தும் மருந்துகள், அவசரத் தேவைக்கான மருந்துகள்
மழையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரெயின்கோட் / குடை
ஆசிரமத்திற்குள் வரும் நேரம்: (நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நாளில்) காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
ஆசிரமத்தில் இருந்து வெளிசெல்ல நேரம்: நிகழ்ச்சி நிறைவுபெறும் நாளன்று இரவு 8:00 மணிக்கு மேல், அடுத்தநாள் காலை 8:00 மணி வரை.
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நாளன்று காலை 7:00 மணி முதல், நிகழ்ச்சி நிறைவுபெறும் நாளிற்கு அடுத்தநாள் காலை 8:00 மணிவரை தங்கும்வசதி வழங்கப்படும்.
இது சாத்தியம்தான். நாங்கள் வழங்கும் அறைகள் அனைத்துமே இருவர் தங்கக்கூடிய அறைகள்தான். அதனால் ஒரே குடும்பத்தில் இருந்து இரட்டைப்படை எண்ணிக்கையில் வருகிறீர்கள் என்றால், நீங்கள் இருவர், இருவராக ஒவ்வொரு அறையிலும் தங்கமுடியும். ஒருவேளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வந்தால், மீதமிருக்கும் அந்த ஒருநபர் மட்டும் வேறு யாரேனும் ஒருவருடன் அறையை பகிர்ந்துகொள்ள நேரும்.
உங்கள் பயணத்திற்குத் தேவையான விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது: https://www.ishafoundation.org/Isha-Yoga-Center/travel-information-isha-yoga-center-india-isha-foundation.isa
வெளிவாகனங்களை பார்க்கிங் செய்வதற்கென சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு வந்ததும் அருகில் இருக்கும் செக்யூரிட்டியை அணுகி, நீங்கள் இங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்திருக்கிறீர்கள் என்றும் 4-நாட்களுக்கு உங்கள் வாகனத்தை பார்க் செய்யவேண்டும் என்றும் கூறினால், அதற்கேற்றார் போல் அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்.
ரசீதை பேப்பர் வடிவில் எடுத்துவர வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் ரசீதின் நகல் உங்கள் ஃபோனிலாவது இருக்கவேண்டும். பதிவை சரிபார்க்கும் இடத்தில் அந்த ரசீதை நீங்கள் காண்பிக்க வேண்டும்.