Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
பாதைதான் சேருமிடம், சேருமிடம் பாதையில் ஒளிந்திருக்கிறது, படைத்தவன் படைப்பில் ஒளிந்திருப்பதைப் போல.
சந்தேகத்துடன், எல்லோரும் உங்களுக்குத் தீங்கு செய்யக் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்துடனேயே எப்போதும் வாழ்ந்தால், வாழ்க்கையில் மிகச்சிறிய செயல்களை மட்டுமே செய்வீர்கள். நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
ஒரே சக்தி பலகோடி விதங்களில் வியாபித்திருக்கிறது - கல்லாக, மரமாக, விலங்காக, மனிதராக, அல்லது மிக சூட்சுமமான வடிவில் தெய்வீகமாக!
என் தாய் என்னைச் சுற்றி முழுமையான அரவணைப்பின் சூழ்நிலையை உருவாக்கினார், ஒருபோதும் அவர் இடையூறாக இருக்கவில்லை. இது எனக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது.
உங்கள் அன்பை, மகிழ்ச்சியை, உற்சாகத்தை அடக்கி வைக்காதீர்கள். நீங்கள் கொடுப்பதே உங்கள் பண்பாக மாறும், அடக்கி வைப்பது அல்ல.
நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு தூசி மட்டுமே. உங்கள் இருப்பு எத்தகையது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், இயற்கையாகவே மௌனமாவீர்கள்.
வாழ்க்கை என்பது உங்களைச் சுற்றி நிகழும் நாடகமல்ல, வாழ்க்கை என்பது 'நீங்கள்' எனும் அந்த அடிப்படையான பரிமாணம்.
மனிதர்கள் அதிக வல்லமை பெறும்போது, நாம் எதிர்செயல் செய்பவர்களாகவும் கட்டாயத்தால் செயல்படுபவர்களாகவும் இல்லாமல், அதிக விழிப்புணர்வாகவும் பொறுப்பாகவும் மாறுவதற்கான அடிப்படையான தேவை இருக்கிறது.
உங்கள் தியானம் உங்களைப் பற்றியது மட்டுமல்ல, நீங்கள் உண்மையாகவே தியானத்தன்மையாக மாறினால், ஏனென்று தெரியாமலே, உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் அமைதியாக ஆகிவிடும்.
தன்னம்பிக்கை என்பது எந்தவகையிலும் தெளிவிற்கான மாற்றாகாது. வெற்றிகரமாக இருக்க உங்களுக்குத் தேவை தெளிவு, தன்னம்பிக்கை அல்ல.
இந்த பௌர்ணமி நாளில், கௌதம புத்தர் முழுமையாக ஞானமடைந்தார், ஆன்மீகத்தின் ஓர் அலையை உருவாக்கினார். உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்கு இது ஒரு ஊக்கமாக விளங்கட்டும்.
யோகா என்றால் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருப்பது - உடலளவில் மட்டுமல்ல, எல்லா விதத்திலும். அப்படி இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும் நலமாக இருப்பீர்கள்.