உலகில் தோன்றிய கலாச்சாரங்களிலேயே தமிழ் கலாச்சாரம் தனித்துவமான, பன்முகத்தன்மை வாய்ந்த ஒன்று. மொழி, இசை, கலை, இலக்கியம் என பலவாறாக இருந்தாலும், அதன் அடிப்படை ஆன்மீகமாக இருந்தது அதற்கு ஒரு முக்கிய காரணம். கட்டிட கலை, பாடல், நடனம் என எதுவாக இருந்தாலும், மிகுந்த பக்தியுடன் மக்கள் செய்தனர். அந்த பக்தி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உயிர்ப்புடன் இருந்ததற்கு கோவில்களே மிக முக்கிய காரணம். அப்படிப்பட்ட கோவில்களை இழக்கும் தருவாயில் உள்ளோம்!
Subscribe