நிசப்தத்தைத் தேடி
பல ஒலிகளைக் கண்டுகொண்டேன்
சத்தங்கள், இசை மற்றும் மந்திரம் என
முடிவற்ற ஒலிகளை சலித்துப்பார்த்து
இந்த பலவிதமான அதிர்வுகளில்
பெரிய வேறுபாடு இல்லையென உணர்ந்தேன்
இன்னும் ஆழமாக கவனித்துக்கேட்டால்
அனைத்தும் வருவது நிசப்தமான மூலத்திலிருந்தே