"உங்களை நீங்களே வெறுமை ஆக்கிக்கொண்டால், தேவிக்கு உங்களுடன் இருப்பதை தவிர வேறு வழியே இல்லை. தேவி உங்களுடன் இருந்தால் எனக்கும் உங்களுடன் இருப்பதை தவிர வேறு வழி இல்லை." - சத்குரு
லிங்கபைரவியின் அருளைப் பெறுவதற்கும், நமக்குள் இருக்கும் பக்தியின் பரிமாணத்தை வெளிக்கொணர்வதற்குமான ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த செயல்முறை.
சூரியனின் ஓட்டம் வடக்கு அரைக்கோளத்திற்கு மாறும் காலமான உத்தராயணத்தின் தொடக்கத்தில் சாதனா தொடங்குகிறது. உத்தராயண காலம் ஆன்மீக கிரகிப்புத்தன்மைக்கு உகந்த காலமாக உள்ளது.
ஆரோக்கியம், செல்வம், அறிவு அல்லது ஆழமிக்க உள்நிலை அனுபவம் என ஒருவரின் குறிக்கோள்கள் எதுவாக இருந்தாலும், தேவி இவை அனைத்தையும் மேலும் பலவற்றையும் வழங்கக்கூடிய தயாள குணமிக்கவளாக இருக்கிறாள்.
தேவியின் அருளை கிரகிக்கும் உங்கள் திறன் அதிகரிக்கிறது.
குறிப்பிட்ட வாழ்க்கை முறையை கடைபிடித்து, தேவியுடன் உங்கள் அருட்தொடர்பை ஆழப்படுத்தும் பிரத்யேகப் பயிற்சிகளுக்கான தீட்சை பெறுதல்.
பக்தியுணர்வுடன் தங்களையே அர்ப்பணிப்பதன் அடையாளமாக, பக்தர்கள் புனித அர்ப்பணங்களைச் செய்ய வழிகாட்டப்படுவார்கள்.
படி 1:
சாதனாவிற்கு பதிவு செய்யவேண்டும். பதிவிற்கு பிறகு நிகழ்ச்சியின் வீடியோவைக் காண லிங்க் பகிரப்படும்.
படி 2:
தீட்சை வழங்கும் நாளுக்கு முன்பாக, தீட்சை பற்றிய தகவல்கள் அடங்கிய ஓரியண்டேஷன் வீடியோவைப் பார்த்திடுங்கள்.
படி 3:
ஜனவரி 11, 18, 21, 25 மற்றும் 29 ஆகிய நாட்களில் ஆன்லைனில் தீட்சை பெறலாம்.
படி 4:
சாதனாவிற்கான குறிப்புகளைப் பின்பற்றி, கொடுக்கப்பட்டுள்ள கால அளவிற்கு சாதனாவைச் செய்யவும்.
படி 5:
நிறைவு நாளுக்கு முன்பாக, அதற்கான குறிப்புகள் அடங்கிய ஓரியண்டேஷன் வீடியோவைப் பார்த்திடுங்கள். (ஆன்லைனில் சாதனாவை நிறைவு செய்தால் மட்டும்).
படி 6:
ஈஷா யோக மையத்தில் நேரிலோ ஆன்லைனிலோ சாதனாவை நிறைவு செய்யலாம் -பிப்ரவரி 1 (பெண்கள்), பிப்ரவரி 16 (ஆண்கள்).
**பதிவிற்கு பிறகு மற்ற விவரங்கள் பகிரப்படும்.
ஏழு வயதுக்கு மேற்பட்ட எவரும் கலந்துகொள்ளலாம்.
தீட்சை - ஆன்லைனில் மட்டும்.
தேவி சந்நிதியில் நேரிலோ ஆன்லைனிலோ சாதனாவை நிறைவு செய்யலாம்.
பெண்கள் பிப்ரவரி 1 தைப்பூசத்தன்று சாதனாவை நிறைவு செய்யலாம்.
ஆண்கள் பிப்ரவரி 16 தைப்பூசத்தை அடுத்துவரும் அமாவாசையன்று சாதனாவை நிறைவு செய்யலாம்.
*தைமாதத்தில் வரும் பௌர்ணமி தினம்
பைரவி சாதனா கிட்டில் இருக்கும் பொருட்கள்:
தேவி படம்
அபய சூத்திரம்
குங்குமம்
தேவி ஸ்துதி
- நீங்கள் தேவி டாலரை (தற்போது உள்ளது அல்லது புதியது) அணிய வேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால், அதை ஈஷா லைஃப்-ல் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த அனைத்து பொருட்களையும் தீட்சை வழங்கும் நாளுக்கு முன்பே தயாராக வைத்திருப்பது அவசியம். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விவரங்கள் தீட்சை வழங்கும் நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
தீட்சை வழங்கும் போது சாதனா குறிப்புகள் விரிவாக வழங்கப்படும். இருப்பினும், சாதனாவின் போது மனதில் கொள்ள வேண்டியவை:
மூலிகை குளியல் பொடியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தல் (ரசாயனம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்)
சாதனா காலத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல், அசைவ உணவு உண்பது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளில் இரண்டு வேளை உணவு மட்டுமே. முதல் உணவு மதியம் 12 மணிக்குப் பிறகு இருக்க வேண்டும்.
வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணிவது சிறந்தது.
மேலும் விபரங்களுக்கு அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு, எங்களைத் தொடர்பு கொள்ளவும்:
இமெயில்: lb.events@lingabhairavi.org
தொலைபேசி: +91-83000 83111