பித்தேற்றும் கைலாஷ் மானசரோவர்
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், கைலாயத்தின் பரவசமூட்டும் பிரம்மாண்ட இருப்பில் திளைத்த கையோடு, ஒரு குறுஞ்செய்தியை சத்குரு நமக்கு அனுப்பியுள்ளார். லாசாவிலிருந்து மானசரோவர், பின்பு கைலாயம் நோக்கிச்சென்ற சத்குருவுடனான யாத்திரையின் கடைசி பகுதியுடைய மெய்சிலிருக்கவைக்கும் புகைப்படங்களையும் இத்துடன் தொகுத்துள்ளோம்.
மூன்று வாரங்கள் மலைகளின் உயரங்களில்... உயரங்களை நன்றாகவே நான் கையாளும்போதிலும், ஒருவர் செய்யவேண்டியதைவிட சற்றே கூடுதலான செயலில் ஈடுபடுவது சற்றே மூச்சுத்திணர வைக்கிறது. காக்புசுந்தி ஏரியிலிருந்து தெற்கு அன்னபூர்ணாவிற்கு, பின்பு மானசரோவர், பின்பு கைலாயம் நோக்கிய பயணம் - இந்த யாத்திரை உயரத்தால் மூச்சடைக்கச் செய்வதோடு, வியப்பால் வாயடைக்கவும் செய்கிறது. ஈடு இணையில்லா இயற்கையின் சக்தியிலிருந்து, கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்ட மறைஞானத்தின் இருப்பு நோக்கிய பயணமிது. இந்தக் கலவை, தலைசுற்ற வைக்கிறது, மனதிலும் இதயத்திலும் பித்தேறச் செய்கிறது, பரவசமூட்டும் பித்துணர்விது...
சத்குருவுடனான கைலாய பயணத்தின் புகைப்படம் மற்றும் குறும்படத் தொகுப்பு:
Subscribe