சத்குரு:

'இளைஞரும் உண்மையும்' இயக்கம் மாபெரும் கர்ஜனையாக உருவெடுத்துள்ளது. இன்றுடன் நான்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ளன, சற்றுமுன்தான் மவுண்ட் கார்மெல் கல்லூரியிலிருந்து திரும்பினோம், அங்கு நிகழ்ச்சி அற்புதமாக நடந்தேறியது. கால்பந்து விளையாட்டு வீரர் சுனில் சேத்ரியுடன் இன்னுமொரு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இவர் இந்திய கால்பந்து விளையாட்டுக்கு அபாரமான பங்காற்றியுள்ளார்.

விநாயகர் சதூர்த்தி என்றால், உங்கள் அனைவருக்கும் இது தெரிந்திருக்கும், கணபதி என்றால் கணங்களின் அரசன் அல்லது கணங்களின் தலைவன். கணங்களிடமிருந்து தலையைப் பெற்றதால், மனித தலையாக இல்லாத அந்த தலையால், அவர் தலைசிறந்த அறிவாற்றல் கொண்டவராக மாறினார். அவரின் புத்திக்கூர்மை, வாழ்க்கை ஏற்படுத்தக்கூடிய தடைகள் அனைத்தையும் தகர்த்தெறியக்கூடியது. அதனால் அவரை விக்னேஷ்வரா என்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பலப்பல வருடங்களுக்குப் பிறகு இப்படி நடக்கிறது, நான் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் நிகழும் எந்தவொரு விசேஷத்திலும் விழாவிலும் திருமணத்திலும் கலந்துகொண்டதில்லை. சென்ற வருடம் நதிகளை மீட்போம் பேரணியின்போது, எதேச்சையாக நான் விநாயகர் சதூர்த்தியன்று மைசூரில் குடும்பத்தினருடன் இருக்க நேர்ந்தது. மறுபடியும் இவ்வருடம் விநாயகர் சதூர்த்தியன்று நான் மைசூரில் இருந்தேன். என் நிகழ்ச்சிகளுக்கு தேதிகள் குறிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் என்னை இந்நாளில் மைசூரில் இருக்கும்படி செய்துவிட்டார்கள், இது அற்புதமானது.

பிறகு அங்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சி, நான் இரண்டு வருடங்கள் படித்த உயர்நிலைப் பள்ளிக்கு செல்லப்போகிறேன். 45 வருடங்களுக்குப் பிறகு அங்கு செல்கிறேன். மைசூரில் இதை எண்ணி மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். அதோடு பிற சிறு நிகழ்ச்சிகளும் உள்ளன, ஒருசிலரை அழைத்துக்கொண்டு சாமுண்டி மலையிலுள்ள சத்குரு ஸ்பாட்டிற்கு செல்கிறோம். பிறகு மைசூரில் சற்றுதொலைவுக்கு மோட்டர்பைக் ஓட்டப்போகிறோம்.

எனவே 'இளைஞரும் உண்மையும்' இயக்கத்தில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன, மெதுமெதுவாக எங்கும் உற்சாகம் பெருகிவருகிறது. முகநூல், டுவிட்டர், என்று எல்லாவிதங்களிலும் உங்களுக்கு இந்நிகழ்ச்சிகள் குறித்து உடனுக்குடன் தெரிவிக்கிறோம், தொடர்பில் இருங்கள். உங்கள் வயது என்னவாக இருந்தாலும், நீங்கள் இளமையாக மாறவும், உண்மையுடன் தொடர்பில் இருப்பதற்குமான நேரமிது!

"இளமைப்பருவம் அபரிமிதமான சக்தி நிறைந்த பருவம். அது வழங்கும் சாத்தியங்களைப் பாருங்கள், பிரச்சனைகளை அல்ல." - சத்குரு

 

அன்பும் அருளும்,