முன்பொரு சமயம் பாண்டவ சகோதரர்கள் நால்வரும் கானகத்தில் விஷமுற்ற குளத்தில் நீரருந்தி ஒருவர் பின் ஒருவராக உயிரிக்கிறார்கள். குளத்திற்கு காவலாக இருந்த ஒரு யட்சன் தனது கேள்விகளுக்கு பதிலளித்தால் யுதிஷ்டிரன் உயிர் தப்புவதோடு சகோதரர்களையும் மீட்கலாம் என்று சவால் விடுகிறான். சவாலை ஏற்ற யுதிஷ்டிரன் மன்னிக்கும் குணம் பற்றிய கேள்விக்கு அளித்த பதில் குறித்து சத்குருவிடம் விளக்கம் கேட்கிறார் ஒரு பங்கேற்பாளர். நல்லொழுக்கம் என்று போதனையோ தத்துவமோ பேசி சமாளிக்காமல், உண்மையில் மன்னிப்பது என்றால் என்ன என்பதை யதார்த்தமாக எடுத்துரைக்கிறார் சத்குரு.