தங்கள் ராஜ்ஜியத்தை 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிறகு பாண்டவர்கள் சிம்மாசனத்தைத் துறந்து சுமேரு மலைக்கு யாத்திரை மேற்கொள்கிறார்கள். மலை ஏற ஏற திரௌபதி, நகுலன், சகாதேவன், பீமன், அர்ஜுனன் என ஒவ்வொருவராக விழுந்து இறக்கிறார்கள். தேவலோகத்தை அடையும் தருவாயில், அஸ்தினாபுரத்தில் இருந்து தன்னோடு ஒரு நாயும் இவ்வளவு தொலைவு பயணித்து வந்திருப்பதை காண்கிறான் யுதிஷ்டிரன். கதை தொடர்கிறது...