Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
ஒவ்வொரு மனிதரும் வேண்டுவது கருணையையோ, தன்னை சகித்துக்கொள்வதையோ அல்ல. மதிப்பையும், தன்னை ஏற்றுக்கொள்வதையும் தான்.
உங்களுக்கும் உடலுக்கும், உங்களுக்கும் மனத்திற்கும் ஒரு இடைவெளி உருவாக்கிவிட்டால் - அதுதான் உங்கள் துன்பங்கள் அனைத்திற்கும் முடிவு.
ஆன்மீகத்தில் இருக்க ஏதோ மலை குகைக்கு போகத் தேவையில்லை. ஆன்மீகம் என்பது வெளியே நடப்பதை பற்றியதே அல்ல - அது உங்களுக்குள் நிகழ்வது.
எந்த ஒன்றுக்கும் நீங்கள் முழுமனதுடன் பொறுப்பு என உணரும்போது, அது உங்களுடையதாக ஆகிறது. உங்களுடன் தொடர்பில் வரும் அனைத்திற்கும் பொறுப்பு என உணர்வுபூர்வமாக பார்க்கும்போது பிரபஞ்சமே உங்களுடையதாக ஆகிவிடும்.
வாழ்வின் மிக அழகான விஷயங்கள் - காதல், இசை, நடனம், புது உருவாக்கம், சிரிப்பு - இவை எல்லாமே நான் என்பதை தள்ளி வைத்தால் மட்டுமே நடக்கும். தன்னைப் பற்றிய கவலையற்ற நிலையில் இருப்பதன் ஆனந்தத்தையும், பரவசத்தையும் உணர்வீர்களாக!
உலகத்தை பற்றி தகவல் சேகரிக்க Internet எனும் வலை போதும். ஆனால், உயிரை உணர, வாழ்க்கையின் ஆழத்தை அனுபவத்தில் பிடித்துக்கொள்ள - நமக்குள்ளே InnerNet அவசியம்.
பக்கத்தில் இருப்பவரிடம் அன்பாக இருப்பதுதான் பெரிய சவால். இங்கு இல்லாத ஒருவரிடம் அன்பாக இருப்பது எப்போதும் சுலபம்.
யோகா என்றால் பிரபஞ்சத்தின் வடிவ அமைப்புடன் பொருந்தும்படி நாம் அமைந்து கொள்வது. வெறுமனே ஒரு துளி படைப்பாக இருப்பதா, படைப்பின் மூலத்துடன் ஒன்றி அதன் பாகமாக வாழ்வதா - அது நம் கையில்தான் இருக்கிறது.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது இல்லை விஷயம். உங்களுக்குள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்கள் என்பதே முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், அதனால் ஆகச்சிறந்ததை செய்கிறது. மனிதன் மட்டும்தான் தயங்குகிறான்...
ஆன்மீக பரிமாணம் இல்லாத ஒன்று இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. இங்கிருக்கும் அனைத்துமே ஆன்மீகம்தான், ஆனால் உணரப்படாமல் இருக்கிறது.