நம் தேசத்தின் ஜனத்தொகையில் 68% பேர் விவசாயிகள். சமீபகாலமாக விவாசாயி என்ற வார்த்தையை படித்தாலோ கேட்டாலோ நம்மை அறியாமலேயே மனதில் ஒரு வலி வருகிறது. பேச்சு வார்த்தைகள் போராட்டங்கள் என்று நடந்து கொண்டுதான் இருக்கிறது , விவசாயிகளின் வாழ்வில் ஒரு இனிய ஆக்கபூர்வமான தீர்வு சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் கோவை வெள்ளியங்கிரி உழவன் FPOவை சேர்ந்த 1063 விவசாயிகள். FPO எனப்படும் விவசாயி மட்டுமே உறுப்பினராகக்கூடிய விவசாயி உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விவசாயத்திற்கு விவசாயிகளே தீர்வாக மாறிய ஓரு விழிப்புணர்வூட்டும் வெற்றிக் கதை - இங்கே இந்த வீடியோவில்.
Subscribe