ஒவ்வொரு மிஸ்டு-காலும் முக்கியம்! அழிந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை மீட்கும் மிக முக்கியமான பணியின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்த, சத்குரு அவர்கள் ஜூலை 9, 2017 அன்று ஒரு நாடு தழுவிய பிரச்சாரத்தைத் துவங்கி வைத்தார். அதுதான், “நதிகளை மீட்போம்”. லட்சக் கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் இதற்கு, நீங்களும் உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்! அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 80009 80009 எனும் எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுப்பது. அவ்வளவுதான்! ஒரேவொரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம், நம் நதிகளை மீட்க அரசாங்கத்திற்கு உந்துதலாய் அமையவிருக்கும் இந்த மாபெரும் இயக்கத்தில் நீங்களும் இணைந்து விடுவீர்கள். மேலும் விபரங்களுக்கு RallyForRivers.org