ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
இந்த நதிக்கரையில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சிர்பூரில், இந்த நதிக்கரையில் அமைந்துள்ள லட்சுமணன் கோவில், சுமார் 1500 வருடங்கள் மேல் பழமையானது. செங்கற்களினால் கட்டப்பட்ட இந்த கோயில் இன்றும் இந்தியாவிலேயே மிக நேர்த்தியான ஒன்றாக திகழ்கிறது.
ஹுமாவில், சாய்ந்த விதமாக கட்டப்பட்டுள்ள சிவன் கோவில் கோபுரம், உலகிலேயே அவ்விதத்தில் கட்டப்பட்ட வெகு சில கோவில்களில் ஒன்று. மகாநதி கரைகளில் பாறைகளினால் ஆன தொட்டில் போன்ற ஒரு இடத்தில் இது அமைந்துள்ளது.