கிருஷ்ணா


ஆற்றின் நீளம்

1400 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

2,58,948 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

13.5 கோடி

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

மகாராஷ்டிரம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம்

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

சென்னை (70 லட்சம் மக்கள் தொகை), ஹைதராபாத் (68 லட்சம் மக்கள் தொகை), விஜயவாடா (10 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 61%
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: நடுத்தரம்
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்
  • மரங்கள் அழிந்த மொத்த அளவு: 97%
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • கிருஷ்ணா நதிப்படுகையில் பெருவாரியாக வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது. 75 சதவிகித நிலப்பரப்பு விவசாய நிலங்கள்.
  • கோதாவரி மற்றும் கிருஷ்ணா டெல்டா பகுதிகள் அருகருகே அமைந்துள்ளன. இரண்டும் சேர்ந்து 12,700 கி.மீ பரப்பளவில் வாழும் சுமார் 1 கோடி மக்களின் வாழ்விற்கு ஆதாரமாய் விளங்குகின்றன.
  • கிருஷ்ணா நதி வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில், கிருஷ்ணா வன சரணாலயம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் மிஞ்சியுள்ள சதுப்புநில காடுகளில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. தனித்துவம் வாய்ந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு இது. செம்மூக்கு முதலை அல்லது உவர்நீர் முதலைகள், ஆற்று நீர்நாய்கள், பாம்புண்ணி கழுகுகள் என பல அரிய வகை உயிரினங்களுக்கு இது வாழ்விடமாக உள்ளது.
  • கான மயில்களுக்கு புகலிடம் கொடுக்கும் ஒரே சரணாலயம் The Great Indian Bustard Sanctuary ஆகும். வெறும் 250 பறவைகளே இப்பொழுது இங்கு மிஞ்சி உள்ளன. இந்த சரணாலயம் சோலாப்பூருக்கு அருகே கிருஷ்ணாவின் கிளைநதியான பீமா நதிக்கரையில் அமைந்துள்ளது.

சமீபத்திய பேரழிவுகள்

ஆந்திரப்பிரதேசம்: 2009 அக்டோபரில், இந்த நூற்றாண்டிலேயே அதிக அளவான வெள்ளப்பெருக்கை கிருஷ்ணா நதி கண்டபோது வறட்சியில் இருந்த ஆந்திர மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. 350 கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்ததால் அடையமுடியா தீவாக மாறியது. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். 2001 முதல் 2003 வரை தொடர்ச்சியாக ஏற்பட்ட வறட்சியினால் ஒரு சிற்றோடையாக மாறி இருந்த கிருஷ்ணா நதி, ஆறே வருடங்களில் இத்தகைய வெள்ளச் சூழ்நிலையை எதிர்கொண்டது. அந்த மூன்று வருட வறட்சி காலத்தில் கிருஷ்ணா கடலினை சேரவில்லை.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீசைலத்தில் 12 ஜோதிலிங்கங்களில் ஒன்று அமைந்துள்ளது. அமராவதி கரையில் அமைந்துள்ள அமரேஸ்வர ஸ்வாமி கோவில், விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவில் ஆகியவை மற்ற முக்கியமான வழிபாட்டு தலங்கள் ஆகும்.

கிருஷ்ணாவின் கிளைநதி பீமாவிற்கு, பீமசங்கர் ஜோதிர்லிங்கம் மூலஸ்தானம் ஆகும்.

துறவிக்கவிஞர் பசவாவின் சமாதி கூடலசங்கமா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு மலபிரபா நதி கிருஷ்ணாவுடன் கலக்கிறது. பசவா தன் பாடல்களில் சிவனை “கூடலசங்கம தேவா” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணாவின் கிளைநதியான துங்கபத்திராவின் கரையில்தான் விஜயநகரம் என்னும் மாபெரும் பேரரசு உருவானது. அதன் உச்ச காலகட்டத்தில், தலைநகர் ஹம்பியில் 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அது உலகின் மிகப்பெரிய நகரமாக திகழ்ந்தது.

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x