கபினி

ஆற்றின் நீளம்

240 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

7040 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

10 லட்சத்திற்கு மேல்

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

பெங்களூரு (84,20,000 லட்சம் மக்கள் தொகை), மைசூரு (8,87,446 லட்சம் மக்கள் தொகை), வயநாடு மாவட்டம் (8,16,558 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 27% (1972-2013)
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவு
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: மிக அதிகம்
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: நடுத்தரத்திலிருந்து அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • கபினி நீர்ப்பிடிப்பு பகுதி 45,000 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதோடு 80MW மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.
  • வயநாடு வனவிலங்கு சரணாலயம், முதுமலை தேசிய பூங்கா, பந்திபூர் தேசிய பூங்கா மற்றும் நகர்ஹோலே தேசிய பூங்கா ஆகியவை கபினியின் வழித்தடங்களில் அமைந்துள்ளன. இச்சரணாலயங்கள் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரிய தளமான நீலகிரி உயிர்க்கோள பாதுகாப்பகத்தின் சில பகுதிகளாகும். இங்கு புலிகள், சிறுத்தைகள், நான்கு வகையான மான்கள், கரடி வகைகள், யானைகள் என பலவித மிருகங்கள் இருக்கின்றன.

சமீபத்திய பேரழிவுகள்

கேரளாவின் வயநாடு பகுதியை மூலமாக கொண்ட கபினி, காவிரியின் முக்கிய கிளைநதியாகும். பருவ மழைக்குப் பிறகு வறண்டு விட்டதால் கபினி 2016 மற்றும் 2017ல் வறட்சியை சந்தித்தது. இதனால், இந்த நதிக்கரையில் வசிப்பவர்கள் தங்கள் நீராதாரத்திற்காக தண்ணீர் தொட்டிகளை நாடும் துர்பாக்கிய நிலையை அடைந்துள்ளனர். நதிக்கரைகளில் காடுகள் அழிக்கப்பட்டதே இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்படி மரங்களை அழிப்பது, கனமழையின்போது வெள்ளநிலையை ஏற்படுத்த வல்லதாகும்.

ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

கபில மகரிஷியின் பெயரால் ‘கபிலா’ என்ற பெயரிலும் கபினி அழைக்கப்படுகிறது. நஞ்சன்குண்டில் உள்ள பிரசித்திபெற்ற கண்டேஷ்வரா கோயில் இந்நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நஞ்சன்குண்ட் ஒரு சிலரால் ‘தட்சின காசி’ என்றும் அழைக்கப்படுகிறது.

References and Credit

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x