ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
பீமாவின் வழித்தடங்களில் எண்ணற்ற கோயில்கள் அமைந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், இந்நதி தொடங்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பீமாசங்கர் ஜோதிர்லிங்கம் என்ற கோயில் அமைந்துள்ளது. பந்தர்பூரில் உள்ள புனித யாத்திரை செல்லக்கூடிய, மிக முக்கியமான தலமான விட்டலா கோயில் இந்நதிக்கரையில் அமைந்துள்ளது.
பீமாவும் கிருஷ்ணாவும் இணையும் சங்கமம் எனும் இடத்தில் பல்வேறு மக்கள் வந்து புனிதநீராடிச் செல்கின்றனர். அஷ்டவிநாயகர் ஆலயங்களில் ஒன்றான சித்திவிநாயகர் கோயில் சித்தாதேக்கில் அமைந்துள்ளது.