இந்திய ஆறுகள் தீவிரமான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. மக்கள்தொகைப் பெருக்கம் தரும் அழுத்தம், தொழில் வளர்ச்சி காரணமாக நமது வற்றாத நதிகளெல்லாம் இப்போது பருவகால நதிகளாகிவிட்டன. பல ஆறுகள் ஏற்கனவே இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. வெள்ளப்பெருக்கம் மற்றும் வறட்சி அதிகரிக்கின்றது, மழைகாலத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதும் மழைகாலம் முடிந்ததும், மறைந்து போவதும் அடிக்கடி நிகழ்கின்றன
- 25% இந்தியா பாலைவனமாய் மாறிக்கொண்டு இருக்கிறது.
- இன்னும் 15 ஆண்டுகளில், உயிர்வாழ தேவையான நீரில் 50% மட்டுமே நமக்கு இருக்கும்
- உலகில் அழிந்து வரும் நதிகளில் முதன்மையானதாக கங்கை இருக்கிறது.
- கடந்த வருடத்தின் பெரும்பாலான காலம் கோதாவரி வற்றியே இருந்தது.
- காவேரியின் ஓட்டம் 40% குறைந்துவிட்டது. கிருஷ்ணா, நர்மதா ஆறுகள், 60% வற்றிவிட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும் வற்றாத நதிகள் அனைத்தும், ஒன்று பருவகால நதிகளாக மாறி வருகின்றன அல்லது அழிந்தே விட்டன. கேரளத்தின் பாரத்புழா, கர்நாடகத்தின் கபினி, தமிழகத்தின் காவிரி பாலாறு மற்றும் வைகை, ஒடிசாவின் முசல், மத்தியப்பிரதேசத்தின் க்ஷிப்ரா இவற்றில் சில. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன.
பல பேராறுகள் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறில் உட்படுத்தப்படுகின்றன.
இது உங்களை எவ்வாறு பாதிக்கும்?
- புள்ளி விவரப்படி நமது தண்ணீர் தேவையின் 65%ஆறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.
- இந்திய பெருநகரங்களில், மூன்றில் இரண்டு நகரங்கள், தினசரி தண்ணீர் பற்றாகுறையால் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நகரவாசிகள் ஒரு கேன் தண்ணீருக்கு பத்து மடங்கு அதிக விலை கொடுக்கின்றனர்.
- அருந்துவதற்கு, வீட்டு உபயோகத்திற்கு மட்டும் நாம் நீரை செலவழிப்பதில்லை. சுமார் 80% நீரை நாம் உண்ணும் உணவினை வளர்க்க பயன்படுத்துகிறோம். ஒரு ஆண்டுக்கு, சராசரி மனிதனது தண்ணீர் தேவை சுமார் 11 லட்சம் லிட்டர்.
- வெள்ளம், வறட்சி மற்றும் நீர்நிலைகள் பருவகாலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளும் சூழல், இவைகளால் தொடர்ந்து நாடு முழுவதும் பயிர்கள் பொய்த்து போகின்றன.
- தட்பவெட்பத்தில் நிகழும் மாற்றங்கள் அடுத்த 25-50 வருடங்களில் மேலும் மோசமான வெள்ளம் மற்றும் வறட்சிக்கு காரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குரிய அறிகுறி இப்பொழுதே தெரியத் துவங்கிவிட்டது.
கங்கை ஆறு