மத்தியப்பிரதேச அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்த “நர்மதா சேவை யாத்திரை”யில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. ஷிவ்ராஜ் சிங்க் சௌஹான் அவர்களுடன் சத்குரு அவர்களும் பங்கேற்றார். அங்கு பேசும்போது, நம் நாட்டில் விவசாயம் சந்தித்துவரும் கவலைக்கிடமான சூழ்நிலையை அடிக்கோடிட்டு, நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயி தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது மிகவும் தலைகுனிவான விஷயமில்லையா? என்று நம்மை வினவுகிறார்.