Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
மனிதர்கள் தங்களை மிகவும் பெரிதாக நினைத்துக்கொள்கிறார்கள். இங்கு நிகழ்வதில் நாம் ஒரு மிகச்சிறிய பகுதியே.
உலகம் உங்கள்மீது என்ன வீசுகிறது என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதைக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பது நூறு சதம் உங்களுடையது. இதற்குத்தான் ஸ்ரீராமர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
உலகில் திறம்பட இயங்குவதற்கு, அறிவு முக்கிய காரணி அல்ல, தெளிவான உள்வாங்கும் திறன்தான் முக்கியமானது.
மனிதராய் இருப்பதென்றால், ஒவ்வொரு உயிரினத்தையும் கனிவுடன் பார்க்கும் திறனுடன் இருப்பது.
உங்கள் வாழ்க்கை அனுபவம், உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் அல்லது எது இருக்கிறது என்பதை சார்ந்தது இல்லை, அது நீங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சார்ந்தது.
உலகிற்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், மகிழ்ச்சியான, ஆனந்தமான மனிதராக இருப்பதுதான்.
வாழ்விலும் மரணத்திலும் நீங்கள் கொண்டுசெல்லக்கூடிய ஒரே உண்மையான செல்வம், உங்கள் அனுபவத்தின் ஆழம் மட்டுமே.
நீங்கள் வெற்றியை விரும்பினால், அதற்கு நீங்களே ஒரு தடையாக இல்லாமல் இருப்பதை முதலில் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி அனுமானங்கள் செய்வது, தொடர்ந்து அறியாமையில் இருப்பதற்கான ஒரு நிச்சயமான வழி.
நீங்கள் பாதிப்படைவது குறித்த பயத்தைக் கடந்துவிட்டால், நீங்கள் இயல்பாகவே உங்கள் வாழ்வை அதன் முழு ஆழத்திற்கு அறிந்துணர்வீர்கள்.
யோகப் பயிற்சிகள் மற்றும் தியானத்தின் நோக்கம் முழுவதுமே, உயர்ந்த நிலையிலான துடிப்பிற்கும் விழிப்புணர்விற்கும் நகர்வதுதான்.