ஆங்கிலேயர்கள் தந்திரமாய் கடன் வலையை பயன்படுத்தி இந்தியாவின் ராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றாக ஆக்கிரமிப்பதில் மும்முரமாக இருந்த நேரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு அடிபணியாமல் நின்றார். அவர்களின் நியாயமற்ற நிபந்தனைகளை ஏற்க மறுத்து, “ நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.நாங்கள் வாழ்வதும் சாவதும் இந்த மண்ணின் பெருமைக்காகவும், மானத்திற்காகவும், கண்ணியத்திற்கும்தான்,” என்று கர்ஜித்தவர் கட்டபொம்மன். ஆகஸ்ட் 15 2022 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகிறது . “இந்தியா@75” தொடரில், நம் இந்திய விடுதலை இயக்கத்தில் அரும்பணி ஆற்றிய,ஆனால் பரவலாக அறியப்படாத நாயகர்களை கொண்டாடுகிறார் சத்குரு அவர்கள்
Subscribe