மக்கள் தொகை அளவுக்கு மீறி போய்க் கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருந்தாலும், செயற்கை கருத்தரிப்பு மையங்களும் ஒரு பக்கம் அதிகரித்துகொண்டு தான் உள்ளன. மழைவளம் குறைந்து வருவது குறித்து சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்காலத்தில் நாம் தண்ணீருக்காக பரிதவிக்கவிருக்கும் நிலை குறித்து எச்சரிப்பதோடு, அதற்கான தீர்வு என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.