கிறங்கினேன்

மலரின் நறுமணம்

மென் காற்றின் குளிர்ச்சி

இரவின் விண்ணொளி வைபவம்

இதயத்தின் இடையறாத சம்மட்டியொலி

இன்னுமின்னும் இயங்கும் இதமான மூச்சு

இத்தனை நிகழ்வுகளும் வெளிப்பார்வைக்கு பதமானவை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரிவாக இவை எனக்கு உயிரூட்டுகிறது, துடிப்பூட்டுகிறது

எரிதழல் தீவிர வாழ்வுக்கு என்னைத் தாரை வார்க்கிறது.

மேற்பார்வைக்கு அழகான நம்புதற்கு அரிதான இந்த

மதியுகக் கலவையனைத்தும்

மனமற்ற, எண்ணமற்ற, எல்லாம் கடந்த

மகத்தான அறிவின் விளைவாகத்தான் இருக்கமுடியும்.

என் வாழ்வுதன்னை அது அடிமைகொண்டது

எந்த மேம்பூச்சும் இல்லா வாழ்வு

ஏக்கங்கள் தொலைத்த வாழ்வு

எல்லையில்லா விருப்பம் தரித்த வாழ்வு

என்றும் நிலையான இந்த இயக்கத்தின் குளிர் நெருப்பு

ஒன்றும் எரித்ததில்லை என்னை ஆனால் என் இருப்பு

இன்றும் பரவசத்திலும் கிறக்கத்திலும்.

அன்பும், அருளும்