இந்த வார சத்குரு ஸ்பாட்டில், திருமணத்தை பிரதிஷ்டை செய்யும் முறையான விவாஹா பற்றி சத்குரு சொல்கிறார். மேலும், இதனை அனைவருக்கும் வழங்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு, அதற்கான பயிற்சிபெற அழைப்பையும் விடுத்துள்ளார்.

திருமணங்களை பிரதிஷ்டை செய்யும் ஒர் முறையான விவாஹா எனும் செயல்முறையை நாங்கள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது ஒரு பண்டைய முறை, ஆனால் சிறிது காலமாக வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. இது யோகக் கலாசாரத்திலிருந்து உருவானது. யோகக் காலாச்சாரத்தின் அடிப்படை செயல்முறை பூதசுத்தி. அதாவது, பஞ்சபூதங்கள் குறித்தஅறிவும், பஞ்சபூதங்களின் மாயாஜாலத்தின் மீது ஆளுமை கொள்வதும் பூதசுத்தி ஆகும். யோகமுறை முழுவதும் இதன்மீதுதான் கவனம் செலுத்துகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருவர் கடந்துசெல்ல விரும்பினால், அவர் சந்நியாசத்தை தேர்ந்தெடுத்து, வாழ்க்கையை குறுக்குப்பாதையில் கடந்துசெல்ல, பூதசுத்தியின் முறைகளை பயன்படுத்துகிறார். ஆனால், வாழ்க்கையின் வழிகளில் தொலைந்திருப்பவர்களுக்கும், உச்சபட்ச இலக்கில் மட்டும் கவனம் கொள்ளாமல் வாழ்க்கை செயல்முறை மீது காதலில் விழுந்திருப்பவர்களுக்கும், வேறொரு வழிமுறை உண்டு. திருமணமாகும் இருவரிடையே, சிக்கிப்போகும் தன்மையை குறைந்தபட்சமாக்கி, அதிகபட்ச ஈடுபாடும் சங்கமமும் ஏற்படுத்துவதற்கும்,இதே பூதசுத்தி செயல்முறையை பயன்படுத்தமுடியும்.

ஒரு நிலையில் பார்த்தால், பூதசுத்தி என்றால் பஞ்சபூதங்களை சுத்தப்படுத்துவது. இது எந்த அளவு சுத்திகரிக்கப்பட்டுள்ளது என்பதே, யாரோ ஒருவரோ, ஏதோ ஒன்றோ, எப்படிப்பட்ட உயிராகிறது என்பதை நிர்ணயிக்கும். மிகவும் குரூரமான வடிவாக இருக்கும்போது, ஓர் உயிர் ஜடப்பொருளாக இருக்கிறது. அது நுட்பமாக நுட்பமாக, பல்வேறு உயிர்களாக உருப்பெறுகிறது. மனித உயிரே உச்சபட்ச நுட்பத்துடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. மனிதன் இன்னும் நுட்பமாகும்போது, தெய்வீகத்தைத் தொடும் வாய்ப்பு இருக்கிறது, யோகமுறை முழுவதும் இது குறித்ததுதான். பஞ்சபூதங்களை தூய்மைப்படுத்துவது ஒருவிதமான சங்கமத்தையும் கொண்டுவருகிறது. ஒவ்வொரு மனிதருள்ளும் இந்த பஞ்சபூதங்கள் எந்த அளவு நுட்பமாக உள்ளன என்பதே, தனிமனிதர்களுடைய வடிவங்களின் வரையறைகளை நிர்ணயிக்கின்றன.

சிலசமயங்களில், பொருள்தன்மையின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டிருப்பது போல் உணர்கிறீர்கள். வேறு சில சமயங்களில் எல்லாவற்றுடனும் ஓர் பாகமாகிவிட்டது போல் உணர்கிறீர்கள். அடிப்படையில், உங்களுக்குள் பஞ்சபூதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதே இதை நிர்ணயிக்கிறது. இவ்வைந்தையும் மட்டுமே கொண்டு, இந்த பிரபஞ்சத்தின் வடிவிலும், உயிரின் வடிவிலும், எவ்வளவு பிரம்மாண்டமான விஷமம் உருவாகியுள்ளது!
ராதே, சந்தீப் திருமணத்தில் இந்த செயல்முறையை நாங்கள் துவங்கினோம்.இப்போது இந்த வாய்ப்பை உலகம் முழுவதற்கும் திறந்து வைக்கிறோம். இந்த செயல்முறை அனைவருக்கும் கிடைப்பதற்காக, இதை வழங்கத் தேவையான நேர்மையும் பக்தியும் கொண்டவர்களுக்கு, நாங்கள் பயிற்சியளிப்போம். இதனை மற்றவர்களுக்கு வழங்கிடும் ஆர்வம் கொண்டவர்கள், குறிப்பாக திருமணமான தம்பதியினர், எங்களை தொடர்புகொள்ளலாம்.

இச்சேவையை மணமகனுக்கும், மணமகளுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வழங்குவது என்பது, இதை வழங்குபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் மிக மதிப்பான, முக்கியமான செயல்முறையாக இருக்கும். மணமக்களுக்கு பலனளிப்பது மட்டுமல்லாது, இந்நிகழ்வைக் காண்பவர்களுக்கும், இதில் கலந்திருப்பவர்கள் அனைவருக்கும் பலனளிப்பதுதான் விவாஹா எனும் செயல்முறையின் தன்மை.

Love & Grace