சத்குரு:

அவ்வப்போது பலரும் நான் ஏன் பிறந்தேன்? எனது வாழ்க்கைக்கு என்ன நோக்கம் இருக்கின்றது என்று கேட்கின்றனர். நான் கேட்கிறேன், உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் இல்லாமல் இருந்தால்தான் என்ன? முதலில் உங்களுக்குள் இந்த கேள்வி எழுவதற்குக் காரணமே, நீங்கள் இன்னமும் வாழ்க்கையின் பேரானந்தத்தை ருசிக்கவில்லை. எனவேதான் வாழ்க்கை அனுபவங்களுக்கு அர்த்தம் தேடுகிறீர்கள். மனிதனாக இருக்கும் மகத்துவம் நீங்கள் இன்னும் அறியவில்லை. உங்கள் ஒவ்வொரு அனுபவமும் ஆனந்தத்தில் திளைத்தால் இப்படிக் கேட்க மாட்டீர்கள். இந்த தன்மையைக் கடக்காமல் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும்போது எல்லாவித தவறான முடிவுகளுக்கும்தான் வருவீர்கள். தற்போதைய உங்கள் வாழ்க்கை அனுபவங்களை துன்பங்கள் என்று முத்திரை குத்துவீர்கள். பிறகு அவற்றை கடவுள் உங்களுக்கு வைக்கும் பரீட்சை என்று நினைப்பீர்கள். கடைசியாக, இதில் நான் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று முடிவெடுப்பீர்கள். ஆக எல்லா தவறான முடிவுகளுக்கும் வருவீர்கள்.

உங்கள் வாழ்க்கைப் பாதை எப்போதோ ஒரு ஷணம் வெற்றி, எப்போதோ ஒரு ஷணம் இன்பம், எப்போதோ ஒரு ஷணம் மகிழ்ச்சி என்று இப்படிப் போகிறது. இதையெல்லாம் கழித்துப் பார்த்தால், காலையில் எழுகிறீர்கள், சமைக்கிறீர்கள், வயிற்றுக்கு அள்ளிப் போடுகிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள். வீட்டிற்கு சோர்வுடன் திரும்புகிறீர்கள், மீண்டும் காலையில்... இப்படித்தான் உங்கள் வாழ்க்கை போகிறது.

உங்கள் வாழ்க்கைப் பாதை எப்போதோ ஒரு ஷணம் வெற்றி, எப்போதோ ஒரு ஷணம் இன்பம், எப்போதோ ஒரு ஷணம் மகிழ்ச்சி என்று இப்படிப் போகிறது. இதையெல்லாம் கழித்துப் பார்த்தால், காலையில் எழுகிறீர்கள், சமைக்கிறீர்கள், வயிற்றுக்கு அள்ளிப் போடுகிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள். வீட்டிற்கு சோர்வுடன் திரும்புகிறீர்கள், மீண்டும் காலையில்... இப்படித்தான் உங்கள் வாழ்க்கை போகிறது.

இருப்பே பேரானந்தமாக இருந்தால், நோக்கத்தைப் பற்றி யாருக்கு என்ன கவலை? துன்பமான மனிதர்கள்தான் ஒன்று சேர்ந்து தத்துவங்கள், மதங்கள், சமூகங்கள் என்று உருவாக்கி வாழ்க்கைக்கு எல்லாவித நோக்கங்களையும் கண்டுபிடித்தார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணமும் உங்களுக்குள் பேரானந்தத்துடன் வெடிக்கும்போது, ஏன், எதற்காக என்னும் கேள்வி எப்படி வரமுடியும்? இந்த நிலையில்தான் உங்களுக்கு யோகா உதவுகிறது. யோகா என்னும் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி உங்கள் எல்லைகளைத் தகர்த்து முன்னேறும்போது, வெறுமனே வாழ்வதே பேரானந்தம்தான். யோக விஞ்ஞானத்தை நீங்கள் முறையாகப் பயன்படுத்த நாம் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.