சிவனின் மிக முக்கியமான அம்சமே அவர் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தார் என்பதுதான். அவர் எத்தனையோ காரியங்களைச் செய்தார்நடனம் ஆடினார்தியானம் செய்தார்இரண்டு முறை திருமணம் செய்தார். எல்லாம் சரிதான். ஆனால்எல்லாவற்றையும் விட அவர் இன்றும் நம் நினைவில் நிற்பதற்கு முக்கியக் காரணம்அவர் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இன்றும் அவருக்குத் தலை வணங்குகிறோம். ஏனென்றால்அறிதலில் அவருக்கு மாற்றாக ஒருவர் இல்லை. சுதந்திரத்தை அவர் முழுமையாக அறிந்திருந்தார். எனவேஇப்போதைய குறுகிய எல்லைகளைத் தாண்டி உங்கள் புரிதல் வளர்ந்தாலேயொழிய அறிதலுக்கான வழி உங்களுக்கு இல்லை.

பெரும்பாலான மனிதர்கள் எதை உணர்வதில் தோல்வி அடைகிறார்களோஅதை அவர் உணர்ந்தார் என்பதுதான் சிவனுடைய முக்கியத்துவம். பெரும்பான்மையான மனிதர்களின் பார்வைக்குள்கூட வராத ஒரு அம்சம்அவருடைய ஒரு அங்கமாகவே இருந்தது. அதுதான் மூன்றாவது கண்ணுக்குப் பொருள்.

சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்தபோது நெருப்பு வெளிப்பட்டதாகச் சிலர் சொல்வதுண்டு. அது அவருக்குள்ளே இருந்த நெருப்பு என்பதைவிட தனக்கு முக்கியம் என்று எவற்றையெல்லாம் தனக்குள் கருதினாரோஅவற்றையெல்லாம் அவர் எரித்தார் என்பதற்குத்தான் அது அடையாளம். எதையெல்லாம் எரிக்க முடியுமோஅதையெல்லாம் தனக்குள் அவர் எரித்தார். அதன்பிறகு அவர் உடம்பில் உள்ள ஒவ்வொரு துளையிலும் வியர்வைக்கும்இரத்தத்திற்கும் பதிலாக சாம்பலே வெளிப்பட்டது என்கிறார்கள். அப்படியானால்மொத்த அறியாமையையும் அவர் எரித்து அழித்திருக்கிறார். எவற்றையெல்லாம் உண்மை என்று மனிதர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களோஅவற்றையெல்லாம் அவர் எரித்திருக்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதைச் செய்த பிறகு மூன்றாவது கண் திறப்பு அவருக்கு நிகழாமல் இருக்க முடியாது. பொதுவாக மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கு என்று இரண்டு வழிகள் உண்டு. ஒரு வழி உள்ளே முழுமையான வெற்றிடமாக ஆவது. அப்படி வெற்றிடம் நிகழும்போதுகதவு உள்ளே வேகமாக இழுக்கப்பட்டு அதன் மூலம் அந்தக் கதவே இல்லாமல் போய் ஒரு திறப்பு நிகழும். அந்தக் கதவானது இற்றுப்போய் உள்ளே ஒன்றும் இல்லாததால் விழுந்துவிடும். சிவன் தன் எண்ணங்களையும்உணர்ச்சிகளையும்உறவுகளையும்உடைமைகளையும் மட்டும் எரிக்கவில்லை. தான் என்னும் இருப்பையே மொத்தமாக எரித்திருக்கிறார். ஒரு முழுமையான வெற்றிடம் அதில் அமைந்திருந்தது. எனவே உள்முகமாகக் கதவு விழுந்து ஒரு திறப்பு நிகழ்ந்தது.

மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கு இன்னொரு வழி என்னவென்றால்எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பது. எண்ணம்உணர்ச்சி போன்றவற்றிற்கு வடிகாலே இல்லை. ஒரு சொல்லைக்கூட நீங்கள் வாய்திறந்து சொல்வதில்லை. சாதாரணமாக நீங்கள் நான்கு நாட்கள் மௌனமாக இருந்தாலேதிடீரென்று ஐந்தாவது நாள் உங்களுக்குப் பாடத் தோன்றும். உங்களுக்கு பாடத் தெரியவில்லை என்றால்ஊளையிடவாவது செய்வீர்கள். ஏனென்றால்எதையாவது வெளிப்படுத்த விரும்புவீர்கள். ஆனால் எதையுமே நீங்கள் வெளிப்படுத்தாமல் இருக்கும்போதுஉள்ளே பெரும் அழுத்தம் கூடிக்கொண்டே போய் உள்ளிருந்தே அந்தக் கதவு உடையும்அது இன்னொரு முறை.

இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு நடுநிலையான பாதை வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்நீங்கள் மிகவும் சாமர்த்தியக்காரராக இருந்தாலும்வாழ்க்கையில் எங்குமே போக வேண்டாம் என்று விரும்பி முடிவெடுத்ததாகத்தான் அர்த்தம். இந்த நடுப்பாதை என்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால்இங்கும் இல்லாமல்அங்கும் இல்லாமல் முழுநேரம் ஒரு அபத்தக் களஞ்சியமாகவே வாழ்வீர்கள். எங்கே சென்றாலும் சரிஉங்கள் அபத்தங்களையே செய்து கொண்டிருப்பீர்கள். இதுதான் நடுப்பாதை.

நீங்கள் எங்கேயும் போகாமல்இந்தப் பாதையே எங்கும் போகாது என்று கடைசியில் முடிவு கட்டுகிறீர்களேஅதுதான் நடுப்பாதைப் பயணம் என்பது.

நீங்கள் ஒரு ஊரில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறீர்கள். வழியில் ஒரு மிகப்பெரிய பாறை குறுக்கிடுகிறது. பாறையைச் சுற்றிக் கடந்து போக இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒரு வழியில் ஒரு புலி உறுமிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு வழியில் பெரும் நெருப்பு எரிந்துகொண்டு இருக்கிறது.

அப்படியானால் நடுப்பாதைதான் இருப்பதிலேயே சிறந்தது என்று கருதி பாறை மீது ஏறினால் கொஞ்ச தூரம் உடற்பயிற்சி செய்வீர்களே தவிரவேறு எங்கேயும் சென்றடைய மாட்டீர்கள். எனவேஒன்று நீங்கள் முழுமையாக வெறுமை அடைய வேண்டும். அந்த வெறுமையே ஒரு திறப்பை நிகழ்த்தும். இல்லையென்றால் முழு அழுத்தத்தினால் கதவு உடையும். இந்த இரண்டு வழிகள்தான் இருக்கின்றன.

இந்த இரண்டில் முதல் வழிதான் சிறந்தது. ஏனென்றால்அழுத்தத்தின் அடிப்படையில் நீங்கள் கதவைத் திறந்தால் அது இன்று திறந்து கொள்ளலாம். ஆனால் நாளை மூடிக் கொள்ளலாம். அல்லது போதிய அழுத்தம் நிகழ்வதற்கு முன்பு வேறு ஏதாவது நிகழ்ந்து நீங்கள் பாதையில் இருந்து விலகி விடலாம்.

ஒரு சின்ன உணர்ச்சியோ எண்ணமோ வெளிப்படுத்தாமல் அழுத்தி வைப்பது என்பது பெரும் சிரமத்திற்குரிய விஷயம். ஒரு சொல்லைக்கூட சொல்லாமல் எதையும் வெளிப்படுத்தாமல் ஒரு அபிப்ராயம் எதையும் சொல்லாமல்மனதில் எழும் எல்லாவற்றையும் அடக்கி வைத்தால் அது சில நேரம் வெடித்துப் போகக்கூடும். ஆனால் அது வெடித்துப் போகா வண்ணம் உங்களுக்குள் திடமாக இருத்தி வைத்தால் உங்கள் மூன்றாவது கண் திறந்து கொள்ளும்.