"என் மகனுக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. மூன்று வயதில் அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில் என் மருமகளுக்கு ஆர்வம் இல்லை. தம்பி தங்கைகளோடு வளராமல், தனியனாக வளரும் குழந்தைக்குப் பாசம், அன்பு இதெல்லாம் எப்படி வரும்? இந்தத் தலைமுறையினருக்கு இதை எப்படி எடுத்துச் சொல்வது?"

உடன் பிறந்தவர்களிடம் மட்டும்தான் அன்பு வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதே தவறு. அப்படியொரு எண்ணத்தை உங்கள் பேரனிடம் ஏற்படுத்துவது அதைவிடத் தவறு.

இன்றைய அவசர உலகில், பெரும்பாலான பெற்றோர்களே குழந்தைகளுக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தனிமையை உணர்கிறார்கள். தாத்தாவும், பாட்டியும், அப்பாவும், அம்மாவுமே அந்தத் தனிமை உணர்வை விரட்ட முடியும்.

உடன் பிறந்தவர்களிடம் மட்டும்தான் அன்பு வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதே தவறு. அப்படியொரு எண்ணத்தை உங்கள் பேரனிடம் ஏற்படுத்துவது அதைவிடத் தவறு.

முக்கியமாக, குழந்தையை அதட்டி மிரட்டிக்கொண்டு இராமல், அதனுடன் நட்பு பாராட்டுங்கள். வீட்டில் இருப்பவர்கள் அவனுடன் நண்பர்களாகப் பழகினால், தம்பிக்காகவோ, தங்கைக்காகவோ அவன் ஏன் ஏங்கப் போகிறான்?

அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று எப்போதும் விரட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோர்கள் இருந்தால், அந்த வீட்டில் பன்னிரண்டு குழந்தைகள் இருந்தாலும், எல்லோரும் தனித்தனியாகத்தான் உணர்வார்கள்.

இன்றைக்கு இந்தப் பூமி, அளவுக்கு அதிகமான ஜனத்தொகையால் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக நம் தேசத்தில் ஜனத்தொகை நூற்று எட்டு கோடியைத் தாண்டிவிட்டது.

நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உணரப்படுவது, வீங்கிக் கிடக்கும் மக்கள்தொகைதான். இந்த நிலையில் இன்னொரு குழந்தையைக் கொண்டுவருவது ஒருவித சமூகக் குற்றம்.

உங்கள் மருமகள் எடுத்துள்ள முடிவு நியாயமானது; புத்திசாலித்தனமானது!

"கடவுள் தரும் பரிசு, குழந்தை, அதைப் பெற்றுக்கொள்வது எப்படிச் சமூகக் குற்றமாகும்?"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அளவான மக்கள் வாழ்ந்தால், சுற்றுப்புறமும் சுவாசிக்கும் காற்றும் கூடச் சுத்தமாக இருக்கும். இருப்பவர்களைக் குறைக்க முடியாது. மேற்கொண்டு சேர்க்காமலாவது இருக்கலாம் அல்லவா?

உணவு தயாரிப்பிலிருந்து எத்தனையோ விஷயங்கள் உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் போதுமானதாக இல்லை. அதனால், கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பல பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

உங்கள் குடும்பத்தில் பிறக்கும் பேரனோ, பேத்தியோதான் கடவுள் தந்த பரிசா? அடுத்தவர் குழந்தையும் கடவுள் தந்த பரிசுதான். முடிந்தால், கவனிப்பாரற்று இருக்கும் மற்ற குழந்தைகளை உங்கள் குடும்பத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுங்களேன். மாறாக, இன்னொரு உயிரை இந்த உலகுக்குக் கொண்டு வருவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

"குழந்தைகள் இருக்கும் இடம்தானே சொர்க்கம்? குழந்தைகள் வேண்டாம் என்கிறீர்களே?"

ஒரு குழந்தை மட்டுமே இருந்தால் அண்ணன் - தம்பி பாசம் வருமா?

குழந்தைகள் இருக்கும் இடம் மட்டும்தான் சொர்க்கமாக இருக்க வேண்டும் என்று ஏன் தீர்மானித்துவிட்டீர்கள்? பெரியவர்கள் இருக்கும் இடத்தை நரகமாக்கிக்கொள்ள வேண்டும் என்று யார் விதி எழுதியது?

ஒரு பாதிரியார் மரணம் அடைந்தார்.

விழித்துப் பார்த்தால், அவர் ஒரு விண்வெளி ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் சொர்க்கத்துக்கான டிக்கெட் இருந்தது.

ரயில் முதல் நிறுத்தத்துக்கு வந்தது. பாதிரியார் வெளியே எட்டிப் பார்த்தார். பிளாட்ஃபாரத்தில் போதிய வெளிச்சம் இல்லை. எண்ணெய் விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டு இருந்தன. துருப்பிடித்த போர்டில், 'சொர்க்கம்' என்ற எழுத்துக்கள் தேய்ந்து போயிருந்தன. ஆங்காங்கே பலர் வறண்ட தரையில், கிழிந்த உடைகளுடன் புரண்டு கிடந்தனர்.

உங்கள் குடும்பத்தில் பிறக்கும் பேரனோ, பேத்தியோதான் கடவுள் தந்த பரிசா? அடுத்தவர் குழந்தையும் கடவுள் தந்த பரிசுதான். முடிந்தால், கவனிப்பாரற்று இருக்கும் மற்ற குழந்தைகளை உங்கள் குடும்பத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுங்களேன். மாறாக, இன்னொரு உயிரை இந்த உலகுக்குக் கொண்டு வருவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பாதிரியார் திடுக்கிட்டார். 'இதுவா சொர்க்கம்?'

இறங்கி, ரயில் நிலைய அதிகாரியின் அறைக்குப் போனார். அங்கே விலா எலும்புகள் தெரிய படுத்திருந்த சாமியார் ஒருவரிடம் விசாரித்தார்.

"ஆம். இதுதான் சொர்க்கம்!" என்றார், அவர்.

"இயேசு, புத்தரெல்லாம் இங்கேயா இருக்கிறார்கள்?"

"ஓ, அவர்கள் எல்லாம் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினார்கள் என்றார் சாமியார்.

புறப்பட்டுக் கொண்டு இருந்த ரயிலில் ஓடிப்போய் ஏறினார் பாதிரியார். அடுத்த ரயில் நிலையம் வந்தது.

பளபளவென நியான் போர்டு 'நரகம்' என்று வரவேற்றது.

பாதிரியார் தயக்கத்தோடு இறங்கினார். பளிங்குக் கற்கள் போடப்பட்ட பிளாட்ஃபாரம், அசுர விளக்குகளின் கீழ் பளபளத்தது. எங்கே திரும்பினாலும் கொண்டாட்டமும், சந்தோஷமாக இருந்தது.

அங்கே ஒரு ஓரத்தில் புத்தர் தியானத்தில் அமர்ந்திருந்தார். இயேசு ஒருபுறம் பலரிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார். இன்னும் பல யோகிகளும், மகான்களும் அங்கே தென்பட்டனர்.

பாதிரியார் அதிர்ந்தார். கோபமாக அங்கிருந்த அதிகாரியின் அறைக்குப் போனார். "ரயில் நிலையங்களில் பெயர்கள் தவறுதலாக மாற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன" என்று புகார் கொடுத்தார்.

அமர்களமாக உடுத்தியிருந்த அதிகாரி சிரித்தார். "அதெல்லாம் இல்லை. நீங்கள் முதலில் பார்த்தது சொர்க்கம்தான். இதுதான் நரகம். முதலில், இங்கேயும் இருளாகத்தான் இருந்தது. புத்தர், இயேசு போன்றவர்கள் இங்கே வந்து இறங்கிய சொற்ப நேரத்தில், எல்லாம் தலைகீழாக மாறிப்போய்விட்டது!" என்றார்.

சொர்க்கம், நரகம் என்று பெயர்ப் பலகை வைப்பதால் மட்டும் அந்த இடங்கள் சொர்க்கமோ, நரகமோ ஆகிவிடுவது இல்லை. சொர்க்கமானாலும் அங்கே உயிரற்றுக் கிடக்க முடியும், நரகமானாலும் அதை உங்கள் இருப்பால் சொர்க்கமாக்கிவிட முடியும்.

ஒற்றைக் குழந்தை இருக்கும் இடத்தையே நீங்கள் சொர்க்கமாக்க முடியும். தெளிவோடு அணுகினால், அருந்துவதையே அமுதமாக்க முடியும்!