கேள்வியாளர்: நான் என்ன செய்தாலும் நிறைய முரண்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு: ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய அளவிலான மக்களுக்கு இது நடப்பதை நான் பார்க்கிறேன். சில பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. ஒருவேளை அது நடக்கவில்லை என்றால், அதற்கு வேறு சில நபர்கள்தான் காரணம் என்று நினைப்பதே பெரும்பாலான மக்களின் அடிப்படையான எண்ணமாக உள்ளது. அவர்கள் மற்றவர்களை நோக்கி விரல் காட்ட முனைகிறார்கள். ஏதோ சில விஷயங்கள் நடக்கவில்லை என்பதற்காக சிலர் மனோதத்துவ காரணங்களைக் கூட தேடுகிறார்கள். "சத்குரு, உங்கள் அருள் எனக்கு கிடைக்கவில்லை" என்று கூட சிலர் என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள். ஈஷா யோகா வகுப்பில் முதல் நாளிலிருந்தோ அல்லது இலவச அறிமுகப் பேச்சிலிருந்தோ கூட, இந்த ஒரு விஷயத்தை உங்கள் தலையில் ஆணியடித்தது போல் பதிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்: ஏதாவது வேலை செய்யவில்லை என்றால், அதற்கு காரணம், அது சரியாக செய்யப்படவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஈஷா யோகா பயிற்சியே இதைப் பற்றிதான்: நீங்கள் எந்தவித முரண்பாடும் இல்லாமல் இங்கே உட்காரலாம். அப்படி நீங்கள் எந்த முரண்பாடும் இல்லாமல் இங்கே உட்கார முடிந்தால், வெளியே உள்ள முரண்பாடுகளும் குறையும்

ஒருவேளை நீங்கள் இப்போது அதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயம் நன்றாக நடக்கவில்லை என்றால், நிச்சயமாக அது சரியான விதத்தில் செய்யப்படவில்லை என்றுதான் அர்த்தம். ஆனால் மக்கள் இதற்கு மனோதத்துவ தீர்வுகளைத் தேடுகிறார்கள். பலருக்கும் இது ஏதோ அமானுஷ்யம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எளிய விஷயங்களை சிக்கலாக்குகிறார்கள், அது ஏதோ புதிராக உள்ளதாக கருதுகிறார்கள். இல்லை, ஆன்மீகம் என்பது மிகவும் விசித்திரமான விஷயங்களை உருவாக்குவதாகும் - உங்கள் ஐந்து புலன்களால் அல்லது உங்கள் அடிப்படை தர்க்கத்தின் மூலம் நீங்கள் உணர முடியாத விஷயங்களை - நியாயமான தர்க்கரீதியான வழியில் அது கிடைக்க செய்திடும். எளிமையான விஷயங்களை கூட ஏதோ மனோதத்துவம் சார்ந்ததாக கருதுவது எந்தவிதமான ஆன்மீகமும் அல்ல.

நீங்கள் செய்ய முயற்சிக்கும் எல்லாவற்றிலும் முரண்பாடு வருகிறது என்றால், நிச்சயமாக நீங்கள் உப்புத்துகல்கள் கொண்ட ஒரு காகிதம். உப்பு காகிதம் பார்த்திருக்கிறீர்களா? அதைக்கொண்டு எங்கு தேய்தாலும் அந்த இடத்தில் ஒரு உராய்வை ஏற்படுத்தும். நான் உங்களுக்கு ஒரு சிறிய உப்பு காகிதத்தை கொடுக்கிறேன். ஒவ்வொரு நாளும், நீங்கள் ஒருவருடன் முரண்பாட்டை எதிர்கொள்ளும் போதெல்லாம், உங்கள் தோலை அந்த காகிதம் கொண்டு தேய்த்துக்கொள்ளுங்கள். இதிலிருந்து உங்களை விரைவாக குணப்படுத்தாவிட்டால், உங்கள் உடலில் தோல் எதுவும் மிச்சம் இருக்காது. உங்கள் உடலில் தோல் எதுவும் இல்லாதபோது, நீங்கள் எந்த உராய்வையும் சந்திக்கமாட்டீர்கள். நீங்கள் சற்றே நிதானமாக செயல்படுவீர்கள். நீங்கள் அந்த வகையான சிகிச்சையை விரும்பினால், நான் அதை செய்ய முடியும். இல்லையெனில், உங்கள் தன்மை என்ன என்று கவனியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் முரண்பாடு நடக்கிறது என்றால், பின் பிரச்சனை உங்களிடம்தான் என்பதை உணருங்கள்.

முரண்பாட்டை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிய விஷயம் இதுதான்: ஒரு நாள், ஒரு மணிநேரம் அல்லது ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை வார்த்தைகள் பேசுவீர்களோ - அதை ஐம்பது சதவீதமாகக் குறைக்கவும். உங்கள் வார்த்தைகளின் மூலம் ஏற்படும் நிறைய முரண்பாடுகள் இதனால் குறைந்துவிடும். நீங்கள் எந்த உயிரைப் பார்த்தாலும் ஒரு ஆண், பெண், குழந்தை, மாடு அல்லது கழுதையைப் பார்த்தாலும், நீங்கள் அவைகளுக்கு தலைவணங்குங்கள். அப்போது உங்களுக்குள் அவ்வளவு முரண்பாடு இருக்காது. ஏதோ செய்தாக வேண்டுமே என்று செய்யாமல் உண்மையில் இவ்வாறு உணர்ந்து செய்து வாருங்கள். அதாவது ஒரு கழுதையை கூட உணர்வுபூர்வமாக வணங்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

இரண்டு வகையான முரண்பாடுகள் உள்ளன: ஒன்று நமக்குள்ளே இருக்கிறது. வெளியே முரண்பாடு என்பது ஒரு வெளிப்பாடு மற்றும் அதன் மூலம் ஏற்படும் ஒரு விளைவு. ஈஷா யோகா பயிற்சியே இதைப் பற்றிதான்: நீங்கள் எந்தவித முரண்பாடும் இல்லாமல் இங்கே உட்காரலாம். அப்படி நீங்கள் எந்த முரண்பாடும் இல்லாமல் இங்கே உட்கார முடிந்தால், வெளியே உள்ள முரண்பாடுகளும் குறையும். ஒருவேளை நீங்கள் அதுபோன்ற பிரச்சனைக்குரியவரை (உப்பு காகிதம் போன்றவரை) சந்திக்கும்போது, சில முரண்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே பொதுவாக, நம்மால் முடிந்தவரை அவர்களைப் போன்றோரை தவிர்ப்போம், ஆனால் சில சமயங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும். நீங்கள் அதுபோன்ற நபருடன் வேலை செய்ய வேண்டியிருக்கும்போது, உங்களுக்கு சாமர்த்தியம் தேவை. இது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

இப்படிப்பட்டவர்களை சந்திக்கும்போது சிலர் மிகவும் தந்திரமாக செயல்படுகிறார்கள். அவர்கள் மிகவும் மென்மையாக இருக்கிறார்கள், மற்ற நபர் எவ்வளவு கடினமானவராக இருந்தாலும், இந்த நபர்கள் தங்கள் வேலையைச் செய்துவிட்டு விழகிவிடுவார்கள். உப்பு காகிதம் போன்றோர்களுடன் பணிபுரிவதற்கு கொஞ்சம் திறமையும் அனுபவமும் தேவை. இதில் ஆன்மீகம் எதுவும் இல்லை - இது ஒரு சமூகத் திறன். முள்ளம்பன்றி அதன் முற்களை சிலிர்த்துக்கொண்டு வைத்திருக்கும்போது, நீங்கள் கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். முற்களின் சிலிர்ப்பு அடங்கியபின் தாராளமாக நீங்கள் அதை கையாளலாம். எல்லா நேரங்களிலும் முற்களை சிலிர்ப்போடு வைத்திருக்கும் வலிமை அதனிடம் இல்லை.

இல்லையெனில், உங்களைச் சுற்றி நடக்கும் முரண்பாடுகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், உங்கள் முரண்பாடு நீங்கள்தான்.