ஞானிகளின் கனவு – தியானலிங்கத்தின் 19 வருடங்கள்
ஞானோதயம் அடைந்த பல யோகிகளின் கனவாகவே இருந்துவந்த தியானலிங்கம், கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுடைய ஒரு சக்தி உருவம். 1999ம் வருடம் ஜுன் மாதம் 24ம் நாள், சத்குருவால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கத்தின் 19 வருடங்களைப் பற்றி அறியலாம்.
ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்ட 19வது தியானலிங்க பிரதிஷ்டை தினத்தின் வீடியோ பதிவுகள் இங்கே உங்களுக்காக!
ஞானோதயம் அடைந்த பல யோகிகளின் கனவாகவே இருந்துவந்த தியானலிங்கம், கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுடைய ஒரு சக்தி உருவம். பல தலைமுறைகளாக, உன்னதமான நிலைகளை அடைந்த யோகிகள் பலர், முழுமையான பரிணாமம் அடைந்த ஒரு உயிரை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு இருந்தார்கள். பல வருட தீவிர பிராண பிரதிஷ்டை மூலம் சத்குரு தியானலிங்கத்தை முக்திக்கான ஒரு நுழைவாயிலாக உருவாக்கினார்.
எதற்காக தியானலிங்கம்?
"தியானலிங்க வளாகத்தில் நீங்கள் வெறுமனே உட்கார்ந்தாலே தியான நிலைக்குச் சென்றுவிடுவீர்கள். அங்கு சென்று பத்து நிமிடங்கள் நீங்கள் வெறுமனே உட்காரும்போது, எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமலே, இயல்பாகவே உங்களால் தியான நிலைக்குச் செல்லமுடியும்." - சத்குரு
சத்குரு:
நவீன அறிவியலால் விளையும் இன்பங்களையும், சௌகரியங்களையும் தெரிந்துகொண்டீர்கள்; ஆனால், தியானலிங்கம் எதற்கு? ஏனென்றால், விஞ்ஞானத்தின் மற்றொரு அம்சமான உள்நிலை விஞ்ஞானத்தின் ஆற்றலை, சுதந்திரத்தை நீங்கள் உணர வேண்டுமென நான் விரும்புகிறேன். அந்த உள்நிலை அறிவியல் மற்றும் யோக விஞ்ஞானத்தால் உங்கள் விதியை நீங்கள் உங்கள் கையில் முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும். அதற்காகவே தியானலிங்கம்.
19 வருடங்களில் தியானலிங்கத்தின் பதிவுகள்..
2018
2017
2016
Subscribe