சத்குரு: உலகில் அதிகமான மக்கள் “நேர்மறையாக நினைப்பது” என்பதைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நேர்மறை எண்ணங்கள் என்று நீங்கள் கூறும்போது, ஒரு வகையில் நீங்கள் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க விரும்பி, மறுபக்கத்தைத் தவறவிடுகிறீர்கள். அந்த மாற்றதை நீங்கள் புறக்கணித்தாலும், அது உங்களைப் புறக்கணிக்காது. உலகில் எதிர்மறையான விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு முட்டாளின் சொர்க்கத்தில் வாழ்வீர்கள். ஆனால், வாழ்க்கை அதற்காக உங்களைத் தண்டிக்கும். தற்போது, கருமேகங்கள் வானத்தில் மிதப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அவற்றை அலட்சியம் செய்யக்கூடும், ஆனால் அவை உங்களை அலட்சியம் செய்யப்போவதில்லை. மழை பெய்யும்போது, அது பெய்கிறது. நீங்கள் நனைக்கப்படும்போது, முழுவதும் நனைந்துவிடுகிறீர்கள்.

நீங்கள் தவிர்க்க முயற்சிப்பது என்னவோ, அது எப்போதும் உங்களில் வலுவாக இடம் பெற்றிருக்கும். வாழ்க்கையின் ஒரு அம்சத்தை அகற்றிவிட்டு, மற்றொன்றுடன் வாழ முயற்சிப்பவர்கள் தனக்குத்தானே துன்பத்தை மட்டுமே ஏற்படுத்திக்கொள்வார்கள்.

நீங்கள் அதைப் புறக்கணித்துவிட்டு, எல்லாம் சரியாகப் போய்விடும் என்று நினைத்துக்கொள்ள முடியும் - இதற்கு ஓரளவு உளவியல் மற்றும் சமூகரீதியான தொடர்பு இருக்கிறது, ஆனால் படைப்பியல்புடன் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஆறுதலாக மட்டுமே இருக்கும். யதார்த்தத்திலிருந்து யதார்த்தமில்லாத நிலைக்குச் செல்வதன் மூலம் உங்களை ஆறுதல்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள். ஏனென்றால், உங்களால் யதார்த்தத்தைக் கையாளமுடியாது என்று உங்களுக்குள் நீங்கள் நம்புகிறீர்கள். மேலும், உண்மையாகவே உங்களால் அதைக் கையாள முடியாமல் போகலாம், ஆகவே நீங்கள் நேர்மறையாகச் சிந்திப்பதற்கு இணங்கிவிடுகிறீர்கள். எதிர்மறையைக் கைவிட்டு, நேர்மறையாகவே சிந்திக்கிறீர்கள். அல்லது வேறுவிதமாகக் கூறினால், எதிர்மறையைத் தவிர்த்துவிடுவதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.

நீங்கள் எதைத் தவிர்க்க முயன்றாலும் அது உங்களது தன்னுணர்வின் அடித்தளமாகவே ஆகிவிடுகிறது. நீங்கள் ஈடுபட்டிருப்பது என்னவோ, அது உங்களுக்குள் உறுதியான இடம் பெற்றிருக்காது. நீங்கள் தவிர்க்க முயற்சிப்பது என்னவோ, அது எப்போதும் உங்களில் வலுவாக இடம் பெற்றிருக்கும். வாழ்க்கையின் ஒரு அம்சத்தை அகற்றிவிட்டு, மற்றொன்றுடன் வாழ முயற்சிப்பவர்கள் தனக்குத்தானே துன்பத்தை மட்டுமே ஏற்படுத்திக்கொள்வார்கள்.

இருமை இயல்பு

Ardhanarishvara painting in Spanda Hall, Isha Yoga Center | Are You A Fan of Positive Thinking? Then Think Again

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இரண்டு இருமைகளுக்கு இடையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை என்று குறிப்பிடுவது என்னவென்றால், ஆண்பால் மற்றும் பெண்பால், ஒளி மற்றும் இருள், பகல் மற்றும் இரவு. இது இல்லாமல், வாழ்க்கை எப்படி நடக்கும்? இது எப்படியென்றால், உங்களுக்கு மரணம் வேண்டாம், வாழ்க்கை மட்டுமே வேண்டும் என்று சொல்வதைப் போன்றது – அப்படிப்பட்ட ஒரு விஷயம் இல்லை. மரணம் இருப்பதால் மட்டுமே வாழ்க்கை இருக்கிறது. இருள் இருப்பதால் மட்டுமே ஒளி இருக்கிறது. இது என்னவென்றால், எதிர்மறையானது உங்களை ஆட்சி செய்வதற்கு நீங்கள் அனுமதிப்பதில்லை. அவை இரண்டும் வாழ்வில் இடம்பெற அனுமதிப்பதுடன், இரண்டையும் எவ்வாறு நமது வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது என்பதைப் பாருங்கள்.

நீங்கள் நேர்மறை அல்லது எதிர்மறையை தடை செய்ய வேண்டியதில்லை, அதிலிருந்து ஒரு நேர்மறையான விளைவை நீங்கள் உருவாக்கவேண்டி இருப்பதுதான் உங்களது திறனுக்கு உட்பட்ட கேள்வியாக இருக்கிறது.

வாழ்க்கையை அது எப்படி இருக்கிறதோ அப்படி நீங்கள் பார்த்தால், அது எப்போதும் சம அளவில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கிறது. அதனை உள்ளபடியே நீங்கள் பார்த்தால், எதிர்மறையோ அல்லது நேர்மறையோ எதுவும் உங்களை ஆட்சிசெய்ய முடியாது. அவைகள் சமமாக இருப்பதால் மட்டுமே, அது தற்போது நிகழந்துகொண்டிருப்பதைப் போல் அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இரண்டையும் நீங்கள் உங்கள் வசப்படுத்திக்கொண்டு, உங்களால் இயன்ற அளவுக்கு வளர்ச்சி அடையவேண்டும்.

 

மின்சாரத்தில் நேர்மின்னோட்டம் மற்றும் எதிர்மின்னோட்டம் இருப்பதால்தான் மின்விளக்கு ஒளிர்கிறது. ஒரு நேர்மறையான விளைவு நிகழ்கிறது, ஆகவே எதிர்மறையை நாம் பொருட்படுத்துவதில்லை. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்தால், அவர்களிடமிருந்து ஆனந்தம் வெளிப்படுகிறது என்னும் நிலையில், ஆண் அல்லது பெண் நமக்கு ஒரு பொருட்டில்லை. அவர்கள் நிறைய எதிர்மறையான விளைவுகளை உருவாக்கத் தொடங்கிவிட்டால், அவர்களை ஒரு பிரச்சனையாக நாம் நினைக்கிறோம். பிரச்சனையாக இருப்பது எதிர்மறையோ அல்லது நேர்மறையோ அல்ல. நீங்கள் உருவாக்கும் இறுதி விளைவுதான் பிரச்சனையாக இருக்கிறது.

நீங்கள் நேர்மறை அல்லது எதிர்மறையை தடை செய்ய வேண்டியதில்லை, அதிலிருந்து ஒரு நேர்மறையான விளைவை நீங்கள் உருவாக்கவேண்டி இருப்பதுதான் உங்களது திறனுக்கு உட்பட்ட கேள்வியாக இருக்கிறது. இந்த உயிர் குறித்து நாம் கவனம் கொள்கிறோம் என்றால், உண்மையிலேயே நாம் எங்கு இருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் நாம் பயணிக்க முடியும். நேர்மறையான சிந்தனை மக்களுக்கு பல சாத்தியங்களை அழித்துவிட்டது. நேர்மறையான சிந்தனை இது போன்றது - ஒரு நேர்மறையான சிந்தனையாளரால் எழுதப்பட்ட ஒரு கவிதை உள்ளது: அதன் பொருள் பின்வருமாறு :

ஒரு சிறிய பறவை வானத்தில் பறந்தது

இது என் கண்ணில் எச்சமிட்டது.

ஆனால் நான் கவலைப்படவோ அழவோ முடியாது,

ஏனென்றால் நான் ஒரு நேர்மறை சிந்தனையாளன்.

எருமைகள் பறப்பதில்லை என்பதில் நான் கடவுளுக்கு நன்றி கூறி, பிரார்த்தனை செய்கிறேன்.

வாழ்க்கையை அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்க நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் ஒரு படி கூட எடுத்து வைக்க வழி இல்லை. இதைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் வேடிக்கையான விஷயங்களை மட்டுமே மனதளவில் செய்ய முடியும். இது உங்களை சிறிது நேரத்திற்கு மகிழ்விக்கும், ஆனால் ஒருபோதும் உங்களை எங்கும் அழைத்துச் செல்லாது.