ஈஷாவில் 8ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்...

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18 வரை) விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன.9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய எட்டாம் நாள் கொண்டாட்டத்தில் வயலின் இசைக் கலைஞர் திருமதி.மீரா சிவராமக்கிருஷ்ணன் அவர்களின் வயலின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

வயலின் இசையால் வசீகரித்த மீரா சிவராமகிருஷ்ணன்!

day8-navarathri2018-ishayogacenter-tamilblog-subimg

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டமான நேற்று, வயலின் இசையில் பல்வேறு மனமயக்கும் கீர்த்தைனைகளை காற்றில் பரப்பி பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்துபடைத்தார் திருமதி.மீரா சிவராமக்கிருஷ்ணன் அவர்கள். பக்க வாத்தியமான மிருதங்கத்துடன் வயலின் இசையும் சங்கமித்து ஒரு சங்கீத சமர்ப்பணத்தை இசைக்குழுவினர் தேவிக்கு வழங்கினர்.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிப்பாள். அதன் அடிப்படையில் நேற்று மஞ்சள் அலங்காரத்திலிருந்து சந்தன அலங்காரத்திற்கு தேவி மாறினாள்!

தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்பு

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது

இன்று…

ஒன்பதாம்நாள் விழாவான இன்று (அக்டோபர் 18) ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் நாட்டிய நாடகம் நிகழவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !