நம் கவிஞர்கள் தேக்கு மரத்தின் பண்புகளை சுட்டிக்காட்டி பாடல்களை இயற்றுவது வழக்கமானதுதான். பண்பலைகளில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளான “அடி தேக்கு மரக்காடு பெருசுதான்! சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்!” என்ற அழகியல் நிறைந்த பாடல் காற்றில் தவழும் அதே வேளையில், ஒரு விவசாயி “ஆத்தோரம் தேக்கு மரம் ஆடுதடி ஊஞ்சலொன்னு...” என தெம்மாங்கு பாடல் ஒன்றை இட்டுக்கட்டி பாடிக்கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது!

தேக்கு மரங்கள் வெயிலின் ஒளியை அதிகம் விரும்புவதால் தமிழகத்தில் செழித்து வளரக்கூடியதாக உள்ளது. பொதுவாக தேக்கு மரம் நட்டு வளர்க்க நினைக்கும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலின் வரப்போரங்களில் நட்டு வைக்கும்போது கூடுதல் பலன்பெறமுடியும்!

நல்ல ஆரோக்கியமான தேகம் வைத்திருப்பவர்களைப் பார்த்து தேக்கு மரம்போன்ற தேகம் என்று சொல்லுவதிலிருந்தே தேக்கு மரத்தின் வலிமையும் உறுதியும் நமக்கு விளங்குகிறது. தேக்கு மரங்கள் அதன் விலைமதிப்பிற்கு மிகவும் பிரசித்தி பெற்றது என்பது நாம் அறிந்ததே! ஒரு விவசாயி தன் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் உடனே ஒரு தேக்கு மரக்கன்றை தோட்டத்தில் நட்டு வைத்து விடுவாராம். அந்த பெண் வளர்வதற்குள் அந்த மரம் வளர்ந்து அவளது திருமணச் செலவிற்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்!

ஆனால், தேக்கு மரங்கள் பற்றி நாம் மாறுபட்ட பார்வையில் இங்கே சில பயனுள்ள தகவல்களைத் தருகிறோம். தேக்கு மரங்கள் என்பது பொதுவாக உயர்குடி மக்களின் வீடுகளை அலங்கரிக்கும் அலங்கார மற்றும் அத்தியாவசிய பொருட்களில் காணப்படும். அன்றைய கால அரண்மனைக் கதவுகள், உத்திரங்கள், கட்டில்கள் போன்றவை தேக்கால் செய்யப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால், தேக்கு மரங்களை வளர்ப்பவர்கள் உயர்குடிகளாகவோ அரச பரம்பரைகளாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை! நாம் ஒவ்வொருவருமே தேக்கினை நட்டு அதன்மூலம் செல்வாக்கு பெறமுடியும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேக்கு மரங்கள் வெயிலின் ஒளியை அதிகம் விரும்புவதால் தமிழகத்தில் செழித்து வளரக்கூடியதாக உள்ளது. பொதுவாக தேக்கு மரம் நட்டு வளர்க்க நினைக்கும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலின் வரப்போரங்களில் நட்டு வைக்கும்போது கூடுதல் பலன்பெறமுடியும்! இதன் கிளைகள் அடர்ந்து பரவாது என்பதால் பயிர்களுக்கான சூரிய வெளிச்சத்தில் தடை ஏற்படாது.

சிலர் எந்தெந்த நிலப்பகுதியில் தேக்கை நடுவது என்ற வரைமுறை அறியாமல், தங்கள் நிலமெங்கும் தேக்கு கன்றுகளை நட்டு விடுகின்றனர். தகுந்த மண் வளமும் நீர் வசதியும் இல்லாத நிலத்தில் வைக்கப்படும் கன்றுகள் ஓங்கி உயர்ந்து மரமாக வளர வழியின்றி குச்சி குச்சியாக நிற்பதைப் பார்க்க முடிகிறது. தேக்கு நடுவதற்கு குறிப்பிட்ட வகையிலான மண்வளமும் நீர் வளமும் தேவை!

தற்போது இயற்கை விவசாயத்தில் ‘மூடாக்கு போடுதல்’ எனும் செயல்முறை அதிகமாக பலன்தரும் செயல்முறையாக உள்ளது. இலைகளைக் கொண்டு பயிர்களின் அடிப்புறத்தில் போடப்படும் இந்த மூடாக்கிற்கு வாய்க்கால் ஓரங்களில் நட்டு வைக்கும் தேக்கு மரங்களின் காய்ந்த சருகுகள் உதவும்!

மூடாக்கு பற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு சுபாஷ் பாலேக்கர் அவர்கள் கூறும்போது, மரங்கள் மண்ணின் சத்துக்களை உறிஞ்சி இலைகளில் சேமித்து வைக்கிறது. இந்த இலைகள் பழுத்து மண்ணில் விழுந்து மட்கும்போது, மண்ணிற்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதாக சொல்கிறார்.

வாழை இலையைப் போலவே தேக்கு இலைகள் நன்றாக அகன்று விரிந்து இருப்பதால் நாம் தேக்கு இலைகளில் கூட உணவருந்தலாம். தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும். தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.

ஈஷா பசுமை கரங்கள்

ஈஷா பசுமைக் கரங்களின் வேளாண் வல்லுநர்கள் மூலம் உங்கள் நிலத்திற்கு ஏற்ற மர இனங்களை நடுவதற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் நீங்கள் மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள முடியும். வறட்சியைத் தாங்கும் மரங்களான வேம்பு, நாட்டுவாகை, பூவரசு போன்ற மரங்களை அதிக தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் நடலாம். தண்ணீர் வசதி இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றாற் போல மலை வேம்பு, செஞ்சந்தனம், தேக்கு போன்ற வகை மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் நல்ல வருமானம் பெறமுடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062