ஸ்ரீகண்ட்- வட இந்திய ரெசிபி ஒன்று உங்களுக்காக...
நம் தென்னிந்தியாவில், தயிரைப் பயன்படுத்தி உணவுகளோ, இனிப்பு வகைகளோ தயாரிப்பது மிகக் குறைவுதான். ஆனால் இங்கே தயிரைக் கொண்டு செய்யப்பட்ட வட இந்திய ரெசிபி ஒன்று உங்களுக்காக...
ArticleOct 14, 2014
ஈஷா ருசி
நம் தென்னிந்தியாவில், தயிரைப் பயன்படுத்தி உணவுகளோ, இனிப்பு வகைகளோ தயாரிப்பது மிகக் குறைவுதான். ஆனால் இங்கே தயிரைக் கொண்டு செய்யப்பட்ட வட இந்திய ரெசிபி ஒன்று உங்களுக்காக...
தேவையான பொருட்கள்:
- கெட்டி தயிர் - 1/2 லிட்டர்
- பொடித்த சர்க்கரை - 150 கிராம்
- ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை:
- கெட்டித்தயிரை துணியில் கட்டி நான்கு மணி நேரம் தொங்கவிட வேண்டும்.
- அதில் உள்ள தண்ணீர் இறங்கிய பின் அதில் பொடித்த சர்க்கரையை கட்டியில்லாமல் கலந்து ஏலக்காய் தூள் தூவி பரிமாறினால் சுவையான ஸ்ரீகண்ட் ரெடி.
- விருப்பப்பட்டால் குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளலாம். இதை பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.
- இது மசால் சேராத சுவையான சத்தான உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.