ஈஷா ருசி

நம் தென்னிந்தியாவில், தயிரைப் பயன்படுத்தி உணவுகளோ, இனிப்பு வகைகளோ தயாரிப்பது மிகக் குறைவுதான். ஆனால் இங்கே தயிரைக் கொண்டு செய்யப்பட்ட வட இந்திய ரெசிபி ஒன்று உங்களுக்காக...

தேவையான பொருட்கள்:

  • கெட்டி தயிர் - 1/2 லிட்டர்
  • பொடித்த சர்க்கரை - 150 கிராம்
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

  • கெட்டித்தயிரை துணியில் கட்டி நான்கு மணி நேரம் தொங்கவிட வேண்டும்.
  • அதில் உள்ள தண்ணீர் இறங்கிய பின் அதில் பொடித்த சர்க்கரையை கட்டியில்லாமல் கலந்து ஏலக்காய் தூள் தூவி பரிமாறினால் சுவையான ஸ்ரீகண்ட் ரெடி.
  • விருப்பப்பட்டால் குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளலாம். இதை பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.
  • இது மசால் சேராத சுவையான சத்தான உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.