சதுரங்க போட்டியில் ஈஷா வித்யா மாணவர்கள்!
தர்மபுரி மாவட்ட அளவில் நிகழ்ந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில், ஈஷா வித்யா மாணவர்கள் பெற்ற வெற்றி குறித்து இங்கே சில வரிகள்...
தர்மபுரி மாவட்ட அளவில் நிகழ்ந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில், ஈஷா வித்யா மாணவர்கள் பெற்ற வெற்றி குறித்து இங்கே சில வரிகள்...
புத்திக்கூர்மையையும் சமயோஜித அறிவையும் கொண்டு விளையாடப்படும் உள்ளரங்க விளையாட்டான ‘செஸ்’ எனப்படும் சதுரங்க விளையாட்டுப் போட்டியானது, தர்மபுரி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்றது. தர்மபுரி கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள், பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், பல பள்ளிகளிலிருந்தும் 139 மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில், தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியிலிருந்து கலந்துகொண்ட 8 மாணவர்களில், மாணவர்கள் சஞ்சய் கோகுல் (4ஆம் வகுப்பு) மற்றும் கோகுல்ராஜ் (5ஆம் வகுப்பு) ஆகியோர் முறையே 7வது மற்றும் 18வது இடங்களை மாவட்ட அளவில் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.
Subscribe