டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதி வெளிவந்த பத்திகளின் தமிழ்வடிவமான இந்த புத்தகத்தில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஒரு பார்வை இங்கே!

சத்குரு அவர்களின் தெளிவான பார்வையில், வாழ்வின் அத்தனை அம்சங்களும் ஒளிபெறும் அற்புதப் பதிவாய் இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதிவந்த பத்திகளின் தமிழ்வடிவம் இது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

போட்டிகள் நிறைந்த உலகில் பூக்களின் பங்கு என்னவென்று இதன் பக்கங்கள் புரளப்புரள நம்மால் புரிந்துகொள்ளமுடியும். உள்ளம் மலர, உறவுகள் மலர, உயிர் மலர, சத்குரு மிகுந்த கருணையோடு இந்நூலில் வழிகாட்டுகிறார்.

நளினமான நகைச்சுவை, நேர்பட உரைக்கும் துல்லியம், உயிரை அசைக்கும் உவமைகள், காலுக்குக் கீழே பூமியைக் கணப் பொழுதில் உருவிவிடும் உண்மைகள் என்று, கற்பகவிருட்சத்தில் மலர்ந்த கதம்பமலர்களின் மாலைஇது.

அன்றாட வாழ்வின் அடிப்படைத் தன்மைகளில் தொடங்கி ஆன்மீகத்தின் உச்சமலர்ச்சி வரையில் ஒவ்வோர் அம்சத்தையும் சத்குரு அனாயாசமாய் அலசிக்கொண்டே செல்கிறார்.

இந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க, நம் பாதையில் புதிது புதிதாய்ப் பூக்கள் சிரிப்பது புலப்படும். வாசித்தவற்றை யோசிக்க யோசிக்க, வாழ்க்கை நம் வசப்படும்.

"பாதையில் பூக்கள்" புத்தகத்தை ஆன்லைனில் பெற

இங்கே

க்ளிக் செய்யவும்.