ஈஷா ருசி

அடை வகைகள் பல இருந்தாலும், சிலவகைகள் மட்டும் தான் நாம் ருசித்து உண்ணும் விதமாக அமையும். அவ்விதத்தில், இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஈஷாவின் மரவள்ளி கிழங்கு கார அடையை ட்ரை செய்து பாருங்கள்! உங்கள் அபிமான உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

தேவையான பொருட்கள் :

  • புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
  • மரவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ
  • ஊற வைத்த கடலை பருப்பு - 50 கிராம்
  • ஊற வைத்த துவரம் பருப்பு - 50 கிராம்
  • மிளகாய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி - சிறிதளவு

செய்முறை :

  • புழுங்கல் அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து பின் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • விழுதாக அதனுடன் மிளகாய், மரவள்ளிக் கிழங்கையும் அரைத்துக் கொண்டு மாவினை அள்ளும் முன் ஊற வைத்த கடலை பருப்பு, துவரம் பருப்பையும் 2 நிமிடம் ஓட விட்டு அள்ளி தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, இஞ்சி இவற்றினை சேர்த்து தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.