'நவராத்திரி' என்றதும் பலருக்கும் அழகழகான கொலு பொம்மைகள் கண்முன்னே தோன்றும்; சிலருக்கு, மாமிமார்கள் பாடும் பஜனைப் பாடல்கள் நினைவுக்கு வரும்; இன்னும் சிலருக்கோ 9 வேடங்களில் சிவாஜி அவர்கள் நடித்த திரைப்படம் நினைவுக்கு வரலாம்; அதெல்லாம் சரி! ஏன் நவராத்திரி கொண்டாடுகிறோம்; அதன் சிறப்புதான் என்ன? தொடர்ந்து படியுங்கள்!

சத்குரு:

யோகக் கலாச்சாரத்தில், தட்சிணாயண காலத்தை (ஆடி முதல் மார்கழி வரை- 6 மாதங்கள்) சாதனா பாதை என்று அழைப்பார்கள். அதிலும், கடைசி மூன்று மாதங்கள் தேவியின் பாதையாக இருக்கிறது. சில சாதகர்கள் சில வகையான சாதனாக்களை அன்றைய தினத்திலிருந்து செய்யத் துவங்குவார்கள். அடிப்படையில் அந்த மூன்று மாதங்கள் பெண் தெய்வத்துக்கான காலகட்டம். இந்த காலகட்டத்தில் பூமி கனிவாகிவிடுகிறது. இச்சமயத்தில் பூமியின் வடக்குப் பகுதிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாகக் கிடைப்பதால், பூமியின் வடக்கு அரைகோளப் பகுதி மென்மையாகிவிடுகிறது. எனவே இது பெண்மையின் காலகட்டம். அதன் துவக்கம்தான் நவராத்திரி அல்லது தசரா. இப்பண்டிகை முழுக்க முழுக்க தேவிக்கு உரியது.

நவராத்திரி, இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் ஒரு பயணம். இந்த ஒன்பது நாட்களும் தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் என்னும் மூன்று அடிப்படை குணங்களுக்கு தக்கவாறு பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று நாட்கள் துர்கா, காளி போன்ற தீவிரத்தன்மையிலிருக்கும் தேவிகளுக்கு உரிய 'தமஸ்' என்று வகைப்படுத்தப்படுகின்றன. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியோடு தொடர்புடையவை. மென்மையான ஆனால் உலகியல் சார்ந்த பெண்தெய்வங்களுக்கு உரியவை. கடைசி மூன்று நாட்கள் அறிவு, ஞானம் போன்ற மற்ற விஷயங்களோடு தொடர்புடைய சரஸ்வதி, அதாவது சத்வ குணத்தோடு தொடர்புடையவை. கடைசி நாள், அதாவது பத்தாம் நாள் விஜயதசமி. அதாவது நீங்கள் இந்த மூன்று குணங்களையும் வெற்றி கொள்கிறீர்கள் என்று பொருள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த மூன்று குணங்களில் எந்த ஒன்றின் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ அது உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் அழைத்துச் செல்லும். நீங்கள் தமஸில் கவனம் செலுத்தினால் ஒருவகையில் சக்தி வாய்ந்தவராவீர்கள். ரஜஸில் கவனம் செலுத்தினால் மற்றொரு வழியில் பலம் பெற்றவராவீர்கள். சத்வத்தில் கவனம் செலுத்தினால் முற்றிலும் மாறுபட்ட ஒரு வழியில் வலிமை பெற்றவராவீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து நீங்கள் சென்றால் அதுதான் முழுமையான விடுதலை. இந்த மூன்றையும் நீங்கள் வென்றுவிட்டால், அன்றைய தினம்தான் விஜயதசமி-வெற்றியின் திருநாள்.

லிங்கபைரவியில் களைகட்டும் நவராத்திரி !

இந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி விஜயதசமியன்று லிங்கபைரவியில் குழந்தைகளுக்கு கல்வியைத் துவக்கி வைக்கும் 'வித்யாரம்பம்' நிகழவிருப்பது குறிப்பிடத்தக்கது.

லிங்கபைரவியில் நவராத்திரி

லிங்கபைரவியில், வரும் அக்டோபர் 5 முதல் 13 வரை நவராத்திரி திருவிழா, 9 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த 9 நாட்களில், ஒவ்வொரு நாள் மாலையிலும் பௌர்ணமியன்று நடப்பதைப் போன்றே அபிஷேகம், தேவி ஊர்வலம், மஹா ஆரத்தி ஆகியவை சிறப்பாக நடைபெற உள்ளன.

நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும், அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள்.

லிங்கபைரவியில் களைகட்டும் நவராத்திரி !.

லிங்கபைரவியில் களைகட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள்

நலிந்து வரும் நமது இந்திய பாரம்பரிய கலையான கைவினைக் கலைக்குப் புத்துயிரூட்டும் விதமாக, சூரியகுண்டம் முன், அக்டோபர் 9 முதல் 13 வரை, 'கலையின் கைவண்ணம்' என்ற கைவினைக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. இதில், இந்தியா முழுவதிலுமிருந்தும் 15 மாநிலங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கலைக் குழுவினர் தங்கள் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளனர். கைவினைக் கலையை, அனைவருக்கும் பறைச்சாற்ற வேண்டும் என்ற நோக்கில், ஈஷா மேற்கொள்ளும் ஒரு முதற்கட்ட முயற்சி இது!

மேலும், ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைசிறந்த கலைஞர்கள் நிகழ்த்தும் இசைக் கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சி நிரல்
நாள் கலைஞர்கள்
அக்டோபர் 5 ரமா ரவி (குரலிசை)
அக்டோபர் 6 சுகந்தா காளமேகம் (குரலிசை)
அக்டோபர் 7 D பால கிருஷ்ணா (வீணை)
அக்டோபர் 8 புரிசை சம்பந்தன் (தெருக்கூத்து)
அக்டோபர் 9 சுப்பு ஆறுமுகம் (வில்லுப்பாட்டு)
அக்டோபர் 10 உமா மஹேஷ்வரி (பரதநாட்டியம்)
அக்டோபர் 11 ஸ்ரீரஞ்சனி சாந்தகோபாலன் (குரலிசை)
அக்டோபர் 12 ஷ்ரேயா தேவ்நாத் (வயலின்)
அக்டோபர் 13 காரைக்கால் கலைமாமணி கேசவசாமி & குழு (பொம்மலாட்டம்)
அக்டோபர் 14 ரஞ்சனி ராமச்சந்திரன் (குரலிசை)
நேரம்: மாலை 5.30 - 7.00 மணி

நிகழ்ச்சி குறித்த தகவல்களுக்கு: 94890 00333
பேருந்து வசதி பெறுவதற்கு: 94434 94434