வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இதுவரை பங்கெடுத்து வந்த ஈஷா, தற்போது, மக்கள் நலனுக்காக, சுடுகாட்டிற்கும் வந்துவிட்டது. ஈஷாவால் பராமரிக்கப்பட்டு வரும் காயாந்த ஸ்தானம் பற்றி ஒரு பார்வை...

கோவை நஞ்சுண்டாபுரத்தில் பார்சன் காம்ப்ளக்ஸ்க்கு எதிரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான மயானம் நவீன எரிவாயு மயானமாக புதுப்பிக்கப்பட்டு ஈஷா யோகா மையத்தின் சார்பில் கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படுகிறது. 'காயாந்த' என்றால் 'உடலின் கடைசி நிலை' என்று பொருள்.

எல்லோரும் ஆனந்தமாக வாழமுடியும் என்றால் ஆனந்த அலை உருவாக்கலாம். அப்படி இல்லை என்றால், அமைதியாகவாவது இறக்கின்ற மாதிரி, ஒருவர் உயிருடன் இருக்கும்போது, ஒரு சொட்டு ஆன்மீகம் அவருக்கு கொடுக்கலாம்.

இந்த எரிவாயு மயானத்தில், ஒரே சமயத்தில் இரு சடலங்களை தகனம் செய்ய இரண்டு அடுப்புகள் உள்ளன. இங்கு தகனம் செய்ய LPG எரிவாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுறது. சுமார் 1 மணி நேரத்தில் இறந்தவரின் அஸ்தி உறவினர்களுக்கு அளிக்கப்பட்டு விடும். இந்த மயானத்தில் அமரர் ஊர்தி, பொதுமக்களுக்காக குறைந்த செலவில் இயக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பராமரிப்பில் இந்த மயானம் பெரும் பங்கு வகிக்கிறது. இதன் வளாகத்தில் காலபைரவருக்கான சிலையும், எதிர்காலத்தில் காலபைரவ கர்மா செய்ய ஒரு அல்லி குளமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தகனம் நடைபெறும்போது, ஆதிசங்கரர் அருளிய ‘நிர்வாண ஷடகம்‘ எனும் உச்சாடனம் நம் வாழ்க்கையின் அடிப்படை உண்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒலிக்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏற்கனவே ஈஷா யோகா மையத்தில் ‘காலபைரவ கர்மா’ என்னும் இறந்தவருக்கான சடங்கும், ‘காலபைரவ ஷாந்தி’ என்னும் இறந்தவருக்காக வருடம்தோறும் செய்யக்கூடிய சடங்கும் நடைபெறுகிறது. காயாந்த ஸ்தானத்திலும் விரைவில் ‘காலபைரவ கர்மா’ தொடங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சத்குரு ஒரு முறை பேசிய போது:

“எல்லோரும் ஆனந்தமாக வாழமுடியும் என்றால் ஆனந்த அலை உருவாக்கலாம். அப்படி இல்லை என்றால், அமைதியாகவாவது இறக்கின்ற மாதிரி, ஒருவர் உயிருடன் இருக்கும்போது, ஒரு சொட்டு ஆன்மீகம் அவருக்கு கொடுக்கலாம். அதற்கும் அவர் வரவில்லை என்றால் நாம் கோயம்புத்தூரில் ஒரு ஈஷா சுடுகாடு ஆரம்பித்திருக்கிறோம். ஈஷா யோகாவிற்கு வராமல் தப்பித்துப் போனவர்களை அங்கு வைத்து ஏதாவது செய்வோம். வாழும்போது தேவையான அறிவு அவருக்கு வரவில்லை. எப்படியோ ஈஷா யோகாவிலிருந்து தப்பித்துப் போய் விட்டார்கள். எனவே உடல் தாண்டிய பிறகாவது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா?

நீங்கள் ஏதோ அவர் இறந்து விட்டார் என்று சொல்கிறீர்கள். உங்களை பொறுத்தவரை அவர் கதை முடிந்து போய்விட்டது. ஆனால் அவர் கதை முடியவில்லை, நடக்கிறது. அவருக்கு வசிப்பிடம் மட்டுமே மாறியிருக்கிறது. உங்களுக்கு பொருள் தன்மையில் மட்டும் தொடர்பு இருப்பதால், ஒருவருக்கு உயிர் போய்விட்டது என்றால் அவருக்கு எல்லாமே முடிந்து போய்விட்டது என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர் இன்னமும் இருக்கிறார். அவர் உடல் இல்லாமல் உங்களிடம் வந்தால் நேசிக்கமாட்டீர்கள். பேய், பிசாசு என்று எல்லாம் பெயர் கொடுப்பீர்கள். எனவே உங்களோடு அவர் வைத்துக் கொண்டிருந்த தொடர்பு மட்டுமே முடிந்திருக்கிறது. மற்றபடி அவர் இன்னமும் இருக்கிறார்.

அப்படிப்பட்டவர்களை நாம் சில செயல்முறைகள் மூலம் தொடமுடியும். அந்த உயிருக்குத் தேவையான நன்மையை செய்ய முடியும். இதற்காகத்தான் இந்தக் கலாச்சாரத்தில் சில சடங்குகள் விஞ்ஞானமாக செய்யப்பட்டு வந்தன. ஆனால் இப்போது விஞ்ஞானம் போய் வியாபாரம் மட்டுமே இருக்கிறது. எனவே மீண்டும் அந்த சடங்குகளை, உண்மையாகவே அந்த உயிருக்கு நன்மையளிக்கும் வண்ணம், செய்ய இருக்கிறோம். இதற்காகத்தான் ஈஷா சுடுகாடு. நாம் இப்போது கோவையில் ஒரு சுடுகாடு ஆரம்பித்து இருக்கிறோம். இன்னொரு சில வருடங்களில் தமிழ்நாட்டில் 500 சுடுகாடு உருவாக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறோம்.”

சத்குரு குறிப்பிட்டுள்ளது போல் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மயானங்கள் நவீனமயமாக்கப்பட்டு ஈஷாவினால் பராமரிப்பில் உள்ளது.

1) கோவை மாநகராட்சி எரியூட்டு மயானம், வீரகேரளம்
2) கோவை மாநகராட்சி எரியூட்டு மயானம், சந்தை அருகில், துடியலூர்
3) கோவை மாநகராட்சி எரியூட்டு மயானம், செட்டிபாளையம் சாலை, போத்தனூர்

மேலும் சென்னை, கோவை ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் மற்றும் பிற மாவட்டங்களில் விரைவில் ஈஷா, நவீன மயானங்களை உருவாக்கி பராமரிக்க உள்ளது.

தகனம் பற்றிய தொடர்புக்கு: 94425 66688, 94425 04646

ஈஷாவில் நடக்கும் காலபைரவ கர்மா பற்றிய விபரங்களுக்கு: 94433 65631, 94864 94865