ஈஷா ருசி

“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி உடற்பருமனை குறைக்க வல்லது கருணைக்கிழங்கு. அதிக உடல் எடை, பார்வைக் கோளாறு, மூட்டுவலி போன்ற கோளாறுகளால் அவதிப்படும் உடற்பருமன் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு. இதை இப்படியும் சாப்பிடலாம் என்பதற்காக ஒரு சமையல் குறிப்பு இங்கே...

கருணைக்கிழங்கு ஃபிரை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்

கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
உப்பு, கரம் மசாலா - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கருணைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். சிறு துண்டுகளாக நறுக்கி அதை உப்பு, கரம் மசாலாவில் புரட்டி எடுத்து, 10 நிமிடம் வைக்கவும். பிறகு அந்த கருணைக்கிழங்கு துண்டுகளை நன்றாக காய்ந்த எண்ணெய்யில் போட்டு, பொன்னிறம் வரும் வரை விட்டு பிறகு எடுக்கவும்.

கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
தேங்காய் பால் - 2 டம்ளர்
புளி - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - தேவையான அளவு
கடுகு, உளுந்து - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கும் புளிக்கரைசலில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கருணைக்கிழங்கு துண்டுகளையும் போட்டு நன்றாக வேகவிடவும். பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி போட்டு இறக்கவும்.